மாணவி ஸ்ரீமதி மரணம்! மெரினா கடற்கரையில் ஏராளமானோர் கூடப்போவதாக பரவும் தகவல்... பொலிசார் குவிப்பு
சென்னை, மெரினா கடற்கரையில் 200க்கும் மேற்பட்ட பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக மெரினாவில் ஏராளமானோர் கூடப்போவதாக தகவல் பரவியதையடுத்தே பொலிசார் முன் எச்சரிக்கை நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
அதன்படி மெரினாவுக்கு வரும் இளைஞர்களை பொலிசார் வெளியேற்றி வருவதால் கடற்கரையானது வெறிச்சோடி காணப்படுகின்றது.
இது தொடர்பாக சமூக வலைதளங்கள் மூலம் தகவல் பரப்பிய 4 பேரை பிடித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் சென்னை மெரினாவில் கறுப்பு சட்டை அணிந்து வருபவர்களை பொலிசார் சோதனையிட்டு வருகின்றனர்.