இந்திய இளம்பெண் கொலை வழக்கில் பிரித்தானிய பொலிசார் மீது நடவடிக்கை
பிரித்தானியாவில் இந்திய இளம்பெண்ணொருவரின் கொலை வழக்கில் சரியான நடவடிக்கை எடுக்கத் தவறியதாக பொலிசார் மீது ஒழுங்கு நடவடிக்கை துவக்கப்பட்டுள்ளது.
இந்திய இளம்பெண் கொலை வழக்கு
2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், திருமணமாகி தன் கணவருடன் இந்தியாவிலிருந்து பிரித்தானியா வந்தார் ஹர்ஷிதா ப்ரெல்லா (24).
ஹர்ஷிதாவும் அவரது கணவரான பங்கஜ் லம்பாவும் (23) இங்கிலாந்தின் Northamptonshireஇலுள்ள Corby என்னுமிடத்தில் வழ்ந்துவந்தார்கள்.
இந்நிலையில். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 14ஆம் திகதி, கிழக்கு லண்டனில் கார் ஒன்றின் பின்புறத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார் ஹர்ஷிதா.
அவரது கணவரான பங்கஜ் தலைமறைவாகிவிட்டார். இன்னமும் அவர் சிக்கவில்லை. சர்வதேச அளவில் அவர் ஹர்ஷிதா கொலை தொடர்பில் தேடப்பட்டுவருகிறார்.
பிரித்தானிய பொலிசார் மீது நடவடிக்கை
இந்நிலையில், தன்னை தன் கணவர் கொடுமைப்படுத்துவதாக ஏற்கனவே ஹர்ஷிதா பொலிசில் புகாரளித்தும் அவர்கள் தக்க நடவடிக்கை எடுக்கவில்லை.
அப்போதே அவர்கள் சரியான நடவடிக்கை எடுத்திருந்தால், ஹர்ஷிதா கொல்லப்பட்டிருக்கமாட்டார்.
ஆகவே, Northamptonshire பொலிசாரில் இரண்டு மூத்த அதிகாரிகளுக்கு ஒழுங்கு நடவடிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அத்துடன், இரண்டு கான்ஸ்டபிள்கள், பணியிடத்தில் தவறான நடத்தையில் ஈடுபட்டது தொடர்பில் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்கள்.
பொலிசார் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் அமைப்பான Independent Office for Police Conduct (IOPC) அமைப்பு, தன் கணவர் தன்னைக் கொடுமைப்படுத்துவதாக ஹர்ஷிதா புகாரளித்தும், பொலிசார் அவரை தொடர்புகொள்வதிலும், விசாரணை மேற்கொள்வதிலும் தவறியிருக்கக்கூடும் என்பது தொடர்பில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாக தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |