பிரித்தானியாவில் 16 வயது சிறுவன் குத்திக் கொலை: 2 பேருக்கு பொலிஸார் வலைவீச்சு
பிரித்தானியாவின் மான்செஸ்டர் பகுதியில் 16 வயது சிறுவன் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வியாழக்கிழமை மாலை 6 மணியளவில், ஓல்ட் டிராஃபோர்டில் உள்ள நார்டன் தெருவின் அந்த சிறுவன் இரண்டு அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டார்.
அங்கு சிறிது நேரத்தில் பொலிஸார் வரவழைக்கப்பட்ட நிலையில், சந்தேக நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.
சிறுவன் உயிருக்கு போராடிய நிலையில், சம்பவ இடத்துக்கு உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்ட, மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். ஆனால், துணை மருத்துவர்கள் முயற்சி செய்த போதிலும், அவர் சிறிது நேரத்தில் இறந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை தொடங்கப்பட்டுள்ளது, எவரும் கைது செய்யப்படவில்லை, ஆனால் அந்த பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விவரம் அல்லது சந்தேக நபர்களின் அடையாளம் அறிந்தால் உடனடியாக தாக்கல் கொடுக்கும்படி பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.