லண்டன் இரயிலில் பெண் பயணி அருகே உட்கார்ந்து அநாகரீகமாக நடந்த ஆண்! நடந்தது என்ன? புகைப்படங்கள்
லண்டனில் ஓடும் இரயிலில் பெண் பயணியின் முன்னே மோசமான செயலை செய்து அநாகரீகமாக நடந்து கொண்ட நபர் தொடர்பிலான முக்கிய தகவலை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.
பெக்ஸ்லேவில் இருந்து லண்டன் விக்டோரியாவுக்கு செல்லும் இரயிலில் தான் இந்த சம்பவம் கடந்த மாதம் 3ஆம் திகதி காலை 8.45 மணியளவில் நடந்துள்ளது.
அப்போது இரயிலில் உட்கார்ந்திருந்த பெண் பயணி அருகில் வந்து ஆண் ஒருவர் உட்கார்ந்திருக்கிறார்.
பின்னர் அப்பெண் கன்முன்னே தன் உடைகளை களைந்து அருவருப்பான மற்றும் அநாகரீகமாக நடந்து கொண்டிருக்கிறார்.
இதையடுத்து அப்பெண் அங்கிருந்து வேகமாக எழுந்து சென்று வேறு பெட்டிக்கு சென்றிருக்கிறார்.
பின்னர் அந்த மர்ம நபர் இரயிலில் இருந்து கீழே இறங்கி சென்றிருக்கிறார். இந்த நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபரின் சிசிடிவி புகைப்படங்களை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.
அவரிடம் சம்பவம் தொடர்பில் தகவல்கள் கிடைக்கும் என பொலிசார் கருதுகின்றனர்.
மேலும் யாருக்காவது இது குறித்து தகவல் இருந்தால் தங்களிடம் தெரிவிக்கலாம் என பொலிசார் கூறியுள்ளனர்.