பிரான்சில் வீடற்ற நபரைத் தாக்கிய பொலிசார்... பூதாகரமாகும் பிரச்சினை
Police officer under investigation after video shows man violently thrown to ground: பொலிசார் ஒருவர் வீடற்ற நபர் ஒருவரை முரட்டுத்தனமாக தள்ளிய நிலையில், அவர் உயிரிழக்க, அந்த பொலிசார் மீது விசாரணை துவக்கப்பட்டுள்ளது.
பிரான்சில் பொலிசார் மீதான புகார்கள் அதிகரித்துவரும் நிலையில், வீடற்ற நபர் ஒருவரின் உயிரிழப்புக்குக் காரணமாக இருந்திருக்கலாம் என கருதப்படும் பொலிசார் ஒருவர் மீது விசாரணை துவக்கப்பட்டுள்ளது.
என்ன பிரச்சினை?
ஜூன் மாதம் 21ஆம் திகதி, தெற்கு பிரான்சிலுள்ள Carcassonne நகரில், இசை நிகழ்ச்சி ஒன்றின்போது பொலிசார் ஒருவர் வீடற்ற நபர் ஒருவரைத் தூக்கி தரையில் வீசும் காட்சி ஒன்று வெளியானது.

அந்த நபர் தலையைப் பிடித்துக்கொண்டு தரையில் விழுந்து கிடப்பதை அந்த வீடியோவில் காணலாம்.
Après les propos racistes, les violences policières. À Carcassonne la police est hors de contrôle ! pic.twitter.com/dT7k4JFhPy
— Thomas Portes (@Portes_Thomas) September 12, 2026
விடயம் என்னவென்றால், அந்த 29 வயது நபர், ஜூலை மாதம் 3ஆம் திகதி மாரடைப்பால் உயிரிழந்துவிட்டார்.
அந்த பொலிசார் அந்த வீடற்ற நபரைத் தாக்கும் காட்சியை சமீபத்தில் நாடாளுமன்ற உறுப்பினரான தாமஸ் (Thomas Portes) என்பவர் சமூக ஊடகத்தில் வெளியிட்டு Carcassonne நகரில் பொலிசார் கட்டுப்பாடின்றி நடந்துகொள்கிறார்கள் என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமையன்று, சம்பந்தப்பட்ட பொலிசார் மீது நீதிமன்ற விசாரணை துவக்கப்பட்டுள்ளது.