லண்டனில் வன்முறையாக மாறிய ஆர்ப்பாட்டம்! இரத்தம் சொட்ட சொட்ட கொண்டு செல்லப்பட்ட பொலிசார்: வெளியான புகைப்படம்
லண்டனில் ஊரடங்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியதால், இதில் பொலிசார் பல படுகாயமடைந்துள்ளனர்.
பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Hyde Park அருகே, ஊரடங்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டக்காரர்கள் வந்த போது, பொலிசார் அவர்களை கலைக்க முயன்றனர்.
இதில், போராட்டக்காரர்கள் மற்றும் பொலிசாருக்கிடையே மோதல் நிலவியது. இதில் போராட்டக்காரர்கள், பொலிசார் மீது பாட்டில்கள வீசத் துவங்கினர்.
இதனால், பொலிசார் பல காயமடைந்துள்ளனர். இதில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட புகைப்படம் ஒன்றில், பொலிஸ் அதிகாரி ஒருவரின் தலையில் காயம் ஏற்பட்ட அவர் இரத்த காயங்களுடன் இருப்பதை பார்க்க முடிகிறது.
மற்றொரு பொலிசாரின் நெற்றியில் இரத்தக் காயம் இருப்பதை காண முடிகிறது. இதையடுத்து அந்த இரண்டு பொலிசாரும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
ஆனால் அவர்கள் காயம் எப்படிப்பட்டவை என்பது குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை, இந்நிலையில், மெட் பொலிசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆக்ஸ்போர்டு தெருவில் நடந்த ஆர்ப்பாட்டட்த்தில், ஆர்ப்பாட்டக்காரர்கள் கடைக்காரர்களிடம் உங்கள் முகமூடிகளை கழற்றுங்கள் என்று கூச்சலிடுவதைக் கண்டனர்.
இதையடுத்து, மோதல் ஏற்பட, பேரணியில் கலந்து கொண்ட ஐந்து பேர் பொலிசார் மீதான தாக்குதல் உள்ளிட்ட குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.