இரவில் கேட்கும் வித்தியாசமான சத்தம்... ஜேர்மனியில் வாழும் அமெரிக்கர்களை பாதித்துள்ள பிரச்சினை தொடர்பாக விசாரணை துவக்கம்
ஜேர்மன் தலைநகர் பெர்லினில் வாழும் அமெரிக்க தூதரக அதிகாரிகள் பலர், ஒரு வித்தியாசமான பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளதாக பல புகார்கள் எழுந்தன.
இதுவரை, உலகம் முழுவதிலுமுள்ள அமெரிக்க தூதரக அலுவலர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் சுமார் 200பேர் இந்த பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.
அதாவது, இரவு நேரத்தில் ஒரு கீச்சிடும் குரல் காதுகளில் கேட்பதாகவும், அதற்குப்பின், தலை சுற்றல், மயக்கம், வாந்தி வருவது போன்ற ஒரு உணர்வு, அதைத்தொடர்ந்து மூக்கிலிருந்து இரத்தம் வருதல் ஆகிய பிரச்சினைகளை அவர்கள் சந்தித்துள்ளார்கள்.
இந்த பிரச்சினை, முதன்முதலாக முதன்முதலாக, 2016ஆம் ஆண்டு, கியூபாவிலிருந்த அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு ஏற்பட்டது கியூபாவின் தலைநகர் ஹவானா.
ஆகவே, இந்த பிரச்சினை ஹவானா அறிகுறி (Havana Syndrome) என அழைக்கப்படுகிறது. அதன் பின்னணியில் ரஷ்யா முதலான பல்வேறு நாடுகள் இருப்பதாக கூறப்பட்டது.
மைக்ரோவேவ் அலைகள் அல்லது சோனிக் அலைகளை பரப்புவதால் இந்த பிரச்சினை ஏற்படுவதாகவும், வேண்டுமென்றோ அல்லது இயந்திரம் ஒன்றிலுள்ள கோளாறு காரணமாகவோ இந்த பிரச்சினை ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படும் நிலையில்,
அது ஏன் குறிப்பாக அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு மட்டும் ஏற்படுகிறது என்ற கேள்விக்கு பதிலில்லை.
இந்நிலையில், இந்த பிரச்சினை தொடர்பாக விசாரணையை துவக்கியுள்ளதாக நேற்று ஜேர்மன் பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.