பிரித்தானியாவுக்கு வரும்போது இளவரசர் ஹரியின் பாதுகாப்புக்கு மட்டும் இத்தனை கோடி செலவாகுமா? வெளியான தகவல்
இளவரசர் ஹரி வருங்காலத்தில் பிரித்தானியாவுக்கு வரும்போது தனியார் மெய்க்காப்பாளர்களை தொடர்ந்து பயன்படுத்த 5,00,000 பவுண்டுகள் செலவாகும் என தெரிய வந்துள்ளது.
26 மணிநேர பயணம்
கடந்த ஆண்டு இளவரசர் ஹரி மற்றும் மேகனின் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக 1.58 மில்லியன் பவுண்டுகள் (2 மில்லியன் டொலர்கள்) செலுத்தப்பட்டது.
ஆனால், பிரித்தானியாவில் டியூக்கின் பொலிஸ் பாதுகாப்பு முழுமையாக ரத்து செய்யப்படவில்லை. முன்னதாக, பிப்ரவரி தொடக்கத்தில் மன்னர் சார்லஸ் புற்றுநோய் சிகிச்சையில் இருப்பதாக செய்தி வெளியானதைத் தொடர்ந்து, அவர் தனது தந்தையைப் பார்க்க பிரித்தானியாவுக்கு 26 மணிநேர பயணத்தை மேற்கொண்டார்.
அந்த பயணத்தின்போது இளவரசருக்கு பொலிஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டதற்கான அறிகுறிகள் இருப்பதாக, முன்னாள் அரச பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
5,00,000 பவுண்டுகள்
இந்த நிலையில், பிரித்தானியாவுக்கு இளவரசர் ஹாரி வருங்காலத்தில் வரும்போது தனியார் மெய்க்காப்பாளர்களைத் தொடர்ந்து பயன்படுத்த வேண்டியிருக்கும்.
இதனால் பொலிஸ் பாதுகாப்பு தொடர்பாக அவருக்கு 5,00,000 பவுண்டுகளுக்கு (இந்திய மதிப்பில் 5,26,58,400) மேல் செலவாகும் என்று தெரிய வந்துள்ளது.
பிரித்தானியாவில் தனியார் பாதுகாப்பு குழுக்கள் ஆயுதங்களை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், அரச பாதுகாப்பு மற்றும் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் அனுபவமுள்ள காவல்துறை அதிகாரிகள் Glock 17 கைத்துப்பாக்கிகளை எடுத்துச் செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |