கருப்பின சிறுமியை சரமாரியாக சுட்டுக்கொன்ற அமெரிக்க பொலிஸ்! என்ன நடந்தது? காவல்துறை வெளியிட்ட பரபரப்பு வீடியோ
அமெரிக்காவில் கருப்பின சிறுமியை பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓஹியோ மாநிலத்தில் உள்ள கொலம்பஸ் நகரிலே இச்சம்பவம் நடந்துள்ளது. கொல்லப்பட்ட சிறுமிக்கு 15 வயது எனவும், அவரின் பெயர் Makiyah Bryan என அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதனால் மக்களின் கோபம் அதிகரித்துள்ள நிலையில், என்ன நடந்தது என்பதை விளக்கும் விதமாக துப்பாக்கியால் சுட்ட காவலரின் உடலில் பொருத்தப்பட்டிருந்த கமெராவில் பதிவான காட்சிகளை கொலம்பஸ் காவல்துறை வெளியிட்டுள்ளது.
அந்த வீடியோவில், காவல்துறை அதிகாரி சம்பவயிடத்திற்கு விரைந்த போது கும்பலாக சிலர் மோதலில் ஈடுபடுகின்றனர்.
சண்டையை நிறுத்துமாறு அதிகாரி பலமுறை கூச்சலிட்டும், Makiyah Bryan கத்தியால் மற்றொரு பெண்ணை தாக்க முயல, அதை தடுக்கும் நோக்கில் பொலிஸ் அதிகாரி சரமாரியாக அவரை நோக்கி துப்பாக்கியால் சுடுகிறார், இதில் Makiyah Bryan சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார்.
இந்நிலையில் Makiyah Bryan வீட்டிற்கு கும்பலாக வந்த பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், சிறுமி தான் பொலிசாருக்கு தகவல் தெரிவித்ததாகவும், அவர் தன்னை தற்காத்துக் கொள்ளவே கையில் கத்தி வைத்திருந்ததாகவும் Makiyah Bryan-யின் அத்தை Hazel Bryant தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து சம்பவம் குறித்து குற்றவியல் விசாரணைத்துறை விசாரணையை நடத்தி வருவதாக அமெரிக்க ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.