லண்டன் இரயிலில் பெண்ணை பின் தொடர்ந்து சென்ற ஆண் செய்த திருட்டு வேலை! நடந்தது என்ன? வெளியான புகைப்படம்
லண்டன் இரயிலில் பெண்ணிடம் இருந்த செல்போனை திருடி சென்ற நபர் தொடர்பான முக்கிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவமானது பெர்மோண்ட்சே - வெஸ்ட்மினிஸ்டர் அண்டர்கிரவுண்ட் இரயில் நிலையம் நடுவில் கடந்த 28ஆம் திகதி காலை 10 மணிக்கு நடந்துள்ளது.
அப்போது இரயிலில் உட்கார்ந்திருந்த பெண்ணை ஆண் ஒருவர் அணுகியிருக்கிறார். பின்னர் அவசரமாக தனது நண்பருக்கு போன் செய்ய வேண்டும் என கூறி பெண்ணிடம் செல்போனை கேட்டு வாங்கினார்.
இதன்பிறகு செல்போனை திரும்ப கொடுக்க அவர் மறுத்த நிலையில் வலுக்கட்டாயமாக அப்பெண் கேட்டு பெற்றார்.
இதையடுத்து அதிகம் கூட்டம் உள்ள இடத்துக்கு அவர் சென்ற போது பின் தொடர்ந்து சென்ற அந்த ஆண் அவரின் செல்போனை பறித்து கொண்டு கீழே இறங்கி ஓடியுள்ளான்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர் குறித்த புகைப்படம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அவரிடம் இந்த கொள்ள சம்பவம் குறித்த தகவல் இருக்கலாம் என பொலிசார் கருதுகின்றனர்.