அதிகாலை 4 மணிக்கு வீட்டில் தூக்கத்தில் இருந்து எழுந்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி! அங்கிருந்த நபர் செய்த மோசமான செயல்.. புகைப்படத்துடன் பின்னணி
அமெரிக்காவில் அதிகாலை 4 மணிக்கு வீடு ஒன்றுக்குள் புகுந்து இளம்பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபரை பொலிசார் தேடி வருகின்றனர்.
கொலம்பியாவில் தான் இந்த சம்பவம் இரு தினங்களுக்கு முன்னர் நடந்துள்ளது. அன்றைய தினம் அதிகாலை 4 மணிக்கு அங்குள்ள ஒரு வீட்டின் கதவை உடைத்து கொண்டு மர்ம நபர் உள்ளே சென்றுள்ளான்.
அங்கு தூங்கி கொண்டிருந்த இளம்பெண் திடீரென அவனை பார்த்து அதிர்ச்சியடைந்தார், பின்னர் அப்பெண்ணை அவன் துஷ்பிரயோகம் செய்தான்.
பின்னர் அங்கிருந்து அவன் தப்பி சென்றான். இந்த நிலையில் குறித்த நபரின் சிசிடிவி புகைப்படத்தை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.
அவன் வயது 30ல் இருந்து 40க்குள் இருக்கும் என தெரிவித்துள்ள பொலிசார் அவனுடைய உயரம் 5 அடி 7 அங்குலம் இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது