மகாராணி சவப்பெட்டி அருகே திடீரென பாய்ந்த நபரால் பரபரப்பு! பயத்தில் கத்திய மக்கள்.. வீடியோ காட்சி
பிரித்தானிய மகாராணி சடலம் வைக்கப்பட்டுள்ள சவப்பெட்டி அருகே ஓடி சென்று அதை இழுக்க முயன்ற நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி இரவு 10 மணிக்கு Westminster Hallல் நடந்துள்ளது. மகாராணிக்கு அஞ்சலி செலுத்த வரிசையில் நின்றிருந்த மக்களை ஒரு நபர் தள்ளிவிட்டபடி திடீரென சவப்பெட்டி அருகே விரைந்தார்.
பின்னர் சவப்பெட்டி மீது கைவைத்து இழுக்க முயன்றார். முக்கியமாக ஏழு வயது சிறுமியை அவர் தள்ளிவிட்டதில் அவர் அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து உடனடியாக விரைந்து செயல்பட்ட பொலிசார் குறித்த நபரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
WATCH: Police tackle man who tried to rush towards Queen Elizabeth's coffin pic.twitter.com/ipuauYbOpA
— BNO News (@BNONews) September 17, 2022
பொது ஒழுங்கை மீறினார் என்ற அடிப்படையில் சம்பவ இடத்தில் ஆயுதமேந்திய காவலர்களால் அவர் கைது செய்யப்பட்டார்.
சம்பவத்தை நேரில் பார்த்தவர் ஒருவர் கூறுகையில், அந்த நபர் ஆரம்பத்தில் இருந்து வரிசையில் தான் வந்தார், ஆனால் அறைக்குள் நுழைந்த போது திடீரென எல்லோரையும் தள்ளிவிட்டு ராணியின் சவப்பெட்டி அருகே ஓடினார், பின்னர் அரச கொடியை கையில் எடுத்து தூக்கி காட்டினார்.
இதை பார்த்த பலர் பயத்தில் அழுதபடி கத்தினார்கள் என கூறியுள்ளார். இந்த சம்பவத்தை தொடர்ந்து நேரலையானது சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.