159 ஆண்களை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரன்: பிரித்தானியாவை உலுக்கிய வழக்கில் திடுக்கிடும் தகவலை வெளியிட்ட பொலிஸ்!
பிரித்தானியாவை உலுக்கிய சீரியல் ரேப்பிஸ்ட் வழக்கில், பாதிக்கப்பட்ட மேலும் 23 பேரை பொலிஸார் விசாரணையில் கண்டுபிடித்துள்ளனர்.
கடந்த 2020 டிசம்பர் 11-ஆம் திகதி பிரித்தானியாவை உலுக்கிய ஒரு வழக்கில் குற்றவாளியான 23 வயதாகும் Reynhard Sinaga என்பவருக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.
இந்தோனேசியாவில் பிறந்து மேற்படிப்பிற்காக ஸ்டூடன்ட் விசாவில் 2007-ஆம் ஆண்டு பிரித்தானியாவுக்கு வந்த Reynhard Sinaga, மத்திய மான்செஸ்டர் பகுதியில் ஒரு குடியிருப்பில் வசித்துவந்தார்.
அங்கேயே செட்டில் ஆன அவர், 2015 மற்றும் 2017-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட நாட்களில் சுமார் 159 ஆண்களை இரவில், தனது வீட்டுக்கு கடத்திவந்து பாலியல் வன்கொடுமைகளை செய்துள்ளார்.
2018-ஆம் ஆண்டு இவர் பொலிஸில் பிடிபட்டார். அவரது வீட்டின் சிசிடிவி காட்சிக்களை சோதனை செய்ததில், அவர் தினமும் இரவு வீட்டிலிருந்து வெளியே சென்று, ஏதேனும் பார் அல்லது இரவு நேர பப்களிலிருந்து வெளியே வரும் ஆண்களை வீட்டிற்கு கடத்திவந்தது தெரியவந்தது.
மேலும், அவரது மொபைல் போனில் இருந்த வீடியோ காட்சிகள் பொலிஸை அதிரவைத்தன. போதைப்பொருள் கொடுத்து கடத்தி வந்த அனைவரையும் Sinaga கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோவாக பதிவு செய்துவந்துள்ளார்.
சுமார் 3 டெர்ராபைட் (3TB) அளவிற்கு அந்த வீடியோக்கள் இருந்துள்ளன. இந்த வழக்கு ஒட்டுமொத்த பிரித்தானியாவையே அதிரவைத்தது.
அவன் 159 பேரை வன்கொடுமை செய்தது மட்டுமே ஆதார பூர்வமாக நிரூபிக்கப்பட்டது. ஆனால், அவன் சுமார் 206 ஆண்களை இவ்வாறு செய்திருக்கக்கூடும் என பொலிஸார் கூறியிருந்தனர்.
பிரித்தானியாவில் அவன் 'Britain's most prolific rapist' என அழைக்கப்படுகிறான்.
Sinaga தற்போது சிறை தண்டனை அனுபவித்துவரும் நிலையில், தற்போது அவனால் பாதிக்கப்பட்ட மேலும் 23 பேரை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
ஆனால், அவர்கள் யாரும் மேலும் அவன் மீது வழக்கு தொடர விரும்பவில்லை, இப்போது அளிக்கப்பட்டுள்ள 40 ஆண்டுகால சிறைத்தண்டனையே அவனுக்கு போதுமானதாக இருக்குமென கூறியதாக பொலிஸார் தெரிவித்தனர்.