மணிக்கட்டை பிளேடால் அறுத்துக்கொண்ட தமிழக தலைமை காவலர்! பாதி வழியிலேயே பறிபோன உயிர்
- தமிழகத்தில் ஒரு மாதத்தில் மட்டும் மூன்று காவலர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்
- மனஉளைச்சலில் இருந்த காவலர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
தமிழகத்தில் தலைமை காவலர் மணிக்கட்டை பிளேடால் அறுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரைச் சேர்ந்தவர் யுவராஜ். இவர் எண்ணூரில் E4 காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார்.
1997ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வந்த யுவராஜ் தொடர் குடிப்பழக்கத்திற்கு ஆளாகியுள்ளார். இதன் காரணமாக அவர் 2019ஆம் ஆண்டு காவலர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் வீட்டில் மன உளைச்சலில் இருந்த யுவராஜ், யாரும் இல்லாத சமயம் பார்த்து தனது கை மணிக்கட்டை பிளேடால் அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அதிக ரத்தம் வெளியேறியதால் யுவராஜ் பாதி வழியிலேயே உயிரிழந்துவிட்டார் என தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பொலிசார் யுவராஜின் உடலை கைப்பற்றி, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.