நான் இறங்கும் போது இதை நினைத்தே வந்தேன்! CSK-வை ருத்ரதாண்டவம் ஆடிய பொல்லார்ட் ஓபன் டாக்
சென்னை அணிக்கெதிரான போட்டியில் தன்னுடைய அதிரடி ஆட்டம் குறித்து கிரன் பொல்லார்ட் கூறியுள்ளார்.
டெல்லியில் நேற்று நடைபெற்ற மும்பை அணிக்கெதிரான போட்டியில், சென்னை அணி 218 ஓட்டங்கள் குறித்தும், தோல்வியை சந்தித்தது. மும்பை அணி வீரர் கிரன் பொல்லார்ட் 34 பந்தில் 87 ஓட்டங்கள் குவித்து, மும்பை அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவினார்.
இது குறித்து போட்டி முடிந்த பின்பு பொல்லார்ட் கூறுகையில், நான் உண்மையில் இந்த நேரத்தில் கடவுள் மற்றும் என்னுடைய மாமா ஸ்டீபனுக்கு தான் நான் சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.
நான் களத்திற்கு வந்த பிறகு சென்னை அணி சுழற்பந்து வீச்சாளர்களுக்கு 4 ஓவர்கள் கொடுக்க வேண்டியிருந்தது. இதனால், நான் சுழற்பந்து வீச்சாளர்களை குறி வைத்து அதிகமான ரன்கள் குவித்துவிட வேண்டும் என நினைத்திருந்தேன். ஆனால் எனக்கு சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக இரண்டு ஓவர் மட்டுமே கிடைத்தது,
அதை நான் சரியாக பயன்படுத்தி கொண்டேன். இது போன்ற போட்டிகளில் ஓரிரு சிக்ஸர்கள் போட்டியையே மாற்றிவிடும். அதிகமான பயிற்சிகள் எடுத்ததன் மூலம் என்னால் இன்று சிறப்பாக விளையாட முடிந்தது.
நான் என்னை 360 டிகிரி வீரர் என கூற மாட்டேன், ஆனால் என்னால் முடிந்த வரையில் அனைத்து திசையிலும் ரன் குவிக்க பார்ப்பேன். கடைசி 6 பந்துகளையும் நானே எதிர்கொள்ள வேண்டும் என நினைத்தேன்.
அதற்கு தாவல் குல்கர்னேவும் மிக சிறப்பாக ஒத்துழைப்பு கொடுத்து விளையாடினார். இது போன்ற பரபரப்பான போட்டியில் நிதானமாக நின்று திட்டங்களை சரியாக செய்வது தான் முக்கியம்.
டூபிளசிஸ் நான் கொடுத்த கேட்சை விட்டது எனக்கு நல்ல வாய்ப்பாக அமைந்துவிட்டது என்று கூறியுள்ளார்.