தித்திக்கும் சுவையில் கோவில் சர்க்கரை பொங்கல்.., வீட்டிலேயே எப்படி செய்வது?
கோயிலில் வழங்கப்படும் சர்க்கரை பொங்கல் என்றாலே தனிச்சுவை தான்.
அதன்படி, பொங்கல் பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ளது.
அந்தவகையில், பொங்கல் பண்டிகையின்போது கோவில்களில் தரப்படும் சர்க்கரை பொங்கல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பச்சரிசி- 1 கப்
- வெல்லம்- 3 கப்
- நெய்- 4 ஸ்பூன்
- முந்திரி- 10
- திராட்சை- 10
- ஏலக்காய் தூள்- ¼ ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் கழுவிய அரிசி மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு குழைய வேகவைத்து வடித்துக்கொள்ளவும்.
பின் ஒரு பாத்திரத்தில் வேகவைத்த சாதம் சேர்த்து அதனுடன் வெல்லம் சேர்த்து மிதமான தீயில் வைத்து கரைத்துக்கொள்ளவும்.

இதற்கடுத்து இதில் நெய் சேர்த்து நன்கு கெட்டியாகி வரும்வரை கொதிக்கவிடவும்.
நன்கு கெட்டியாகி வந்ததும் இதில் நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து கிளறவும்.
இறுதியாக இதில் ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து இறக்கினால் சுவையான கோவில் சர்க்கரை பொங்கல் தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |