பொன்முடிக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்குக.., தீக்குளிக்க முயன்ற கவுன்சிலருக்கு சிகிச்சை
பொன்முடிக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கக் கோரி தீக்குளிக்க முயன்ற கவுன்சிலருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தீக்குளிக்க முயன்ற கவுன்சிலர்
தமிழக அமைச்சரவையில் நேற்று மாற்றம் செய்யப்பட்டது. அப்போது, வனத்துறை அமைச்சர் பொன்முடி பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டதால் விழுப்புரம் மாவட்ட திமுகவினரிடையே அதிர்ச்சி ஏற்பட்டது.
இந்நிலையில், பொன்முடிக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று திருவெண்ணை நல்லூர் கடை வீதியில் பேரூராட்சி மன்ற துணை தலைவர் ஜோதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது, திருவெண்ணை நல்லூர் பேரூராட்சி 15-வது வார்டு கவுன்சிலர் பாக்கியராஜ் என்பவர் கையில் இருந்த மண்ணெண்ணெயை மேலே ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
பின்னர் அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பொலிஸார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |