சர்ச்சை பேச்சுக்கு மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்ட அமைச்சர் பொன்முடி
கூட்டம் ஒன்றில் சர்ச்சையாக பேசியது தொடர்பாக அமைச்சர் பொன்முடி மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுள்ளார்.
பொன்முடி மன்னிப்பு
திமுக முன்னாள் துணைப் பொதுச்செயலாளரும், அமைச்சருமான பொன்முடி கூட்டம் ஒன்றில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இவரின் கருத்துக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்தனர்.
இந்நிலையில், தான் பேசிய சர்ச்சை கருத்துக்கு பொன்முடி மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் அவர், "தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஒரு உள் அரங்கக் கூட்டத்தில், தகாத பொருளில் தவறான சொற்களைப் பயன்படுத்தி நான் பேசிய பேச்சுக்கு மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.
இந்தத் தகாத கருத்தை நான் பேசியது குறித்து உடனடியாக மனப்பூர்வமாக வருந்தினேன். நீண்ட காலம் பொது வாழ்க்கையில் உள்ள எனக்கு இதுபோன்ற தடுமாற்றம் ஏற்பட்டது குறித்து நான் மிகவும் வருந்துகிறேன்.
பலருடைய மனதைப் புண்படுத்தும் வகையில் இப்பேச்சு அமைந்து விட்டது குறித்தும், அவர்கள் தலைகுனியும் சூழல் ஏற்பட்டது குறித்தும் நான் மிகவும் மனம் வருந்துகிறேன்.
மனம் புண்பட்ட அனைவரிடமும் நான் பேசிய பேச்சுக்கு மீண்டும் மீண்டும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |