லண்டனில் 19 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து! வெளியான அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள்
கிழக்கு லண்டனில் உள்ள 19 மாடி கோபுர கட்டிடத்தில் பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
பாப்லரில் உள்ள இந்த கட்டிடத்தில் 8,9 மற்றும் 10 ஆகிய மூன்று தளங்களில் உள்ள குடியிருப்புக்களில், உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டது.
அந்த மூன்று தளங்களில் இருந்த 4 குழந்தைகள் மற்றும் 38 பெரியவர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாக லண்டன் தீயணைப்பு படை தெரிவித்துள்ளது.
New Providence Wharf estate-ல் உள்ள ஒரு தொகுதியில் ஏற்பட்ட இந்த தீயை அணைக்க சுமார் 125 தீயணைப்பு வீரர்கள் கிட்டத்தட்ட 3 மணி நேரம் போராடினர். தீயணைப்பு வீரர்கள் 08:55 மணிக்கு அழைக்கப்பட்டதைத் தொடர்ந்து, சுமார் 11:30 மணியளவில் தீயைக் கட்டுக்குள் கொண்டுவவந்தனர்.
புகையை சுவாசித்ததால் பாதிக்கப்பட்ட 2 ஆண்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மேலும், உயிர்சேதம் ஏற்பட்டதாக இதுவரை தகவல் ஏதும் வெளிவரவில்லை.
இந்நிலையில், விபத்துக்கான காரணம் தெரியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர், தொடர்ந்து விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அவர்கள் கூறியுள்ளனர்.
விபத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகின்றன.
Fire tears through a tower block in east London pic.twitter.com/gjvpT3Ahue
— The Sun (@TheSun) May 7, 2021
The scene at New Providence Wharf in Poplar after a serious fire on Friday morning - residents have spoken of their anger at delays in removing cladding from the 19-storey tower block pic.twitter.com/WKUyoFwtRf
— Jamie Roberton (@jamiemroberton) May 7, 2021