இந்திய தடுப்பூசி போட்ட பிரித்தானியர்களுக்கு தடை! திடீரென அந்தர்பல்டி அடித்த பிரபல ஐரோப்பிய நாடு: வெளியான முக்கிய அறிவிப்பு
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியை அங்கீகரிக்க மறுப்பு தெரிவித்து வந்த ஐரோப்பிய நாடான போர்ச்சுகல், திடீரென முடிவை மாற்றியுள்ளது.
AstraZeneca தடுப்பூசியை கோவிட்ஷீல்டு என்ற பெயரில் இந்தியாவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம் தயாரித்து உள்ளூர் மற்றும் வெளிநாடுகளுக்கு விநியோகித்து வருகிறது.
சுமார் 5 மில்லியம் பிரித்தானியர்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிட்ஷீல்டு தடுப்பூசி போட்டுள்ளனர்.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியை அங்கீகரிக்க போர்ச்சுகல் மறுப்பு தெரிவித்து வந்த நிலையில், எதிர்வரும் கோடை காலத்தில் அந்நாட்டிற்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டிருந்த பிரித்தானியார்களிடையே இது கலக்கத்தை ஏற்படுத்தியது.
அதாவது, போர்ச்சுகல் வரும் கோவிட்ஷீல்டு போட்ட பிரித்தானியர்கள் இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்த வேண்டும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
தொடர்ந்து இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியை அங்கீகரிக்க மறுப்பு தெரிவித்து வந்த போர்ச்சுகல், திடீரென அனைத்து AstraZeneca தடுப்பூசிகளையும், சீன தடுப்பூசியான சினோவாக்கையும் அங்கீகரிப்பதாக அறிவித்துள்ளது.
போர்ச்சுகல் ஜனாதிபதி Marcelo Rebelo de Sousa பிரேசிலுக்கு பயணம் மேற்கொள் உள்ளதால், பிரேசிலும் பயனடைய இந்த முடிவை எடுக்க வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.