பிரித்தானிய தந்தைக்கும் மகனுக்கும் உணவில் விஷம் வைக்கப்பட்டதாக கூறப்பட்ட விவகாரம்: பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது
பங்களாதேஷ் நாட்டுக்குச் சென்றிருந்த பிரித்தானியர்களான ஒரு தந்தையும் மகனும் சந்தேகத்துக்குரிய வகையில் உயிரிழந்த நிலையில், அவர்களுடைய உணவில் விஷம் வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்தது.
Cardiffஐச் சேர்ந்த Rafiqul Islam (51) குடும்பத்தினர், இரண்டு மாத விடுமுறைக்காக பங்களாதேஷ் சென்றிருந்தனர். அங்கு, Sylhet என்ற இடத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றை வாடகைக்கு எடுத்து அவர்கள் தங்கியிருந்த நிலையில், மதியம் சாப்பிட்டுவிட்டு ஓய்வெடுக்கச் சென்ற குடும்பத்தினர் சுயநினைவிழந்து கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் அனைவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், வழியிலேயே, Rafiqul Islam மற்றும் அவரது மகனான Mahiqul (16) ஆகிய இருவரும் உயிரிழந்தார்கள்.
மற்ற குடும்ப உறுப்பினர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள்.
Image - RUNNER MEDIA/BBC
Rafiqul குடும்பத்தினருக்கு விஷம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டதையடுத்து, பொலிசார் விசாரணை ஒன்றைத் துவக்கினார்கள்.
இந்நிலையில், Rafiqul மற்றும் அவரது மகனான Mahiqul ஆகிய இருவரின் முதல் கட்ட பிரேதப் பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன. அந்த அறிக்கையின்படி, இருவருக்கும் விஷம் கொடுக்கப்பட்டதற்கான உறுதியான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை என பிரேத பரிசோதனை மேற்கொண்ட மருத்துவரான Dr Shamsul Islam தெரிவித்துள்ளார்.
ஆகவே, மேலதிக ஆய்வுகளுக்காக பிரேத பரிசோதனை முடிவுகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள Dr Shamsul Islam, அந்த முடிவுகள் வரும் வரை, Rafiqul மற்றும் Mahiqul மரணம் குறித்த எந்த முடிவுக்கும் வரமுடியாது என்று கூறியுள்ளார்
இதற்கிடையில், Rafiqulஉடைய மனைவியான Husnara (45), தம்பதியரின் மகனான Sadiqul (24) ஆகியோருடைய நிலைமையில் முன்னேற்றம் காணப்படுவதாகவும், தம்பதியரின் மகளான Samira (20)இன் நிலைமை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Image -FAMILY PHOTO