மாதந்தோறும் ரூ.6000 வருமானம்.., அஞ்சலகத்தின் மாதாந்திர வருமானத் திட்டம்
பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக பெற்றோர் பல்வேறு சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்து வருகின்றனர்.
அந்தவகையில், அஞ்சலகத்தின் மாதாந்திர வருமானத் திட்டம் (POMIS) பாதுகாப்பான முதலீட்டு திட்டமாக உள்ளது.
இந்தத் திட்டத்தில் தற்போது ஆண்டுக்கு 7.4% வட்டி வழங்கப்படுகிறது. குறைந்தபட்சம் ரூ.1,000 முதல் முதலீடு செய்யும் இத்திட்டத்தின் கால அளவு 5 ஆண்டுகள் ஆகும்.
தனிநபர் கணக்கில் அதிகபட்சமாக ரூ.9 லட்சமும், கூட்டுக் கணக்கில் அதிகபட்சமாக ரூ.15 லட்சமும் முதலீடு செய்யலாம்.

உதாரணமாக, ரூ.5 லட்சம் முதலீடு செய்தால், ஆண்டுக்கு ரூ.37,000 வட்டி கிடைக்கும். இதன் மூலம் மாதந்தோறும் சுமார் ரூ.3,083 வருமானம் கிடைக்கும்.
பெரியவர்கள் தங்கள் பெயரில் தனிநபர் கணக்கைத் தொடங்கலாம். அதிகபட்சம் 3 பெரியவர்கள் இணைந்து கூட்டுக் கணக்கையும் தொடங்கலாம்.
மேலும், பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர்கள் மைனர் குழந்தையின் பெயரில் கணக்கு தொடங்கலாம்.
கணக்கு தொடங்கிய முதல் ஒரு ஆண்டுக்குள் பணத்தை திரும்பப் பெற முடியாது.

1 முதல் 3 ஆண்டுகளுக்குள் கணக்கை முடித்தால், முதலீட்டுத் தொகையில் 2% பிடித்தம் செய்யப்படும். மேலும், 3 முதல் 5 ஆண்டுகளுக்குள் முடித்தால், 1% பிடித்தம் செய்யப்படும்.
ரூ.10 லட்சம் முதலீடு செய்தால், 7.4% வட்டி விகிதத்தில் ஆண்டுக்கு ரூ.74,000 வட்டி கிடைக்கும். அதாவது, மாதந்தோறும் சுமார் ரூ.6,167 வருமானமாக கிடைக்கும்.
5 ஆண்டுகள் முடிவடைந்ததும் முதலீடு செய்த ரூ.10 லட்சம் முழுமையாக திரும்ப வழங்கப்படும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |