Post Office -ன் 2 வருட சூப்பர் திட்டம்.., ரூ.2 லட்சம் முதலீட்டுக்கு எவ்வளவு தொகை கிடைக்கும்?
அதிக வட்டியை தரும் பெண்களுக்கான அஞ்சல் அலுவலக திட்டத்தை பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.
என்ன திட்டம்?
மத்திய மற்றும் மாநில அரசுகள் பெண்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.
அந்தவகையில், பெண்களுக்காக பிரத்யேகமாக மகிளா சம்மான் சேமிப்பு திட்டத்தை (Mahila Samman Saving Certificate) மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
நீங்கள் குறுகிய காலத்திற்கு FD செய்ய நினைத்தால், உங்கள் சொந்த பெயரில் தொகையை முதலீடு செய்வதற்கு பதிலாக, அதை உங்கள் மனைவி, தாய் அல்லது மகள் பெயரில் MSSC-யில் முதலீடு செய்யுங்கள். மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் (MSSC) என்பது பெண்களுக்காக அரசாங்கத்தால் நடத்தப்படும் திட்டமாகும்.
இந்தத் திட்டத்தில் 2 ஆண்டுகளுக்கு பணத்தை முதலீடு செய்யலாம். மேலும் அந்த முதலீட்டில் 7.5 சதவீத வட்டியைப் பெறலாம். அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.
ரூ.2 லட்சம் முதலீடு
இந்தத் திட்டத்தில் நீங்கள் 2 ஆண்டுகளுக்கு ரூ.2,00,000 முதலீடு செய்தால், வட்டியில் இருந்து ரூ.32,044 மட்டுமே கிடைக்கும். ஆனால் இந்தத் திட்டத்தின் காலக்கெடுவை அரசு தற்போது நீட்டிக்காததால், மார்ச் 31 வரை மட்டுமே இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
இப்போது நாம் ரூ.1 லட்சம், ரூ.1.5 லட்சம் மற்றும் ரூ.2 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு வட்டி கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.
மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் திட்டத்தில் ரூ.1,00,000 முதலீடு செய்தால், 7.5 சதவீத வட்டி விகிதத்தில், முதிர்ச்சியின் போது ரூ.1,16,022 கிடைக்கும். அதாவது வட்டியிலிருந்து ரூ.16,022 கிடைக்கும்.
நீங்கள் ரூ.1,50,000 டெபாசிட் செய்தால், 2 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.1,74,033 கிடைக்கும். அதாவது வட்டியிலிருந்து ரூ.24,033 கிடைக்கும்.
அதேபோல, ரூ.2,00,000 முதலீடு செய்தால், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.32,044 வட்டி கிடைக்கும். அதன்படி முதிர்வு தொகையாக ரூ.2,32,044 கிடைக்கும்.
கணக்கை திறப்பது எப்படி?
உங்கள் வீட்டில் உள்ள ஒரு பெண்ணின் பெயரில் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய விரும்பினால், அதற்காக, அவர்களின் கணக்கை தபால் நிலையத்தில் திறக்க வேண்டும்.
கணக்கைத் திறக்கும்போது, ஆதார் அட்டை, பான் அட்டை மற்றும் புகைப்படம் போன்ற KYC ஆவணங்கள் தேவைப்படும். இதில் வயது வரம்பு இல்லை.
இந்தத் திட்டத்தில் எந்த வயதுடைய பெண்ணின் பெயரிலும் முதலீடு செய்யலாம். ஒரு மைனர் பெண்ணின் பெயரிலும் பாதுகாவலர் கணக்கைத் திறக்கலாம்.
வசதிகள்
மகிளா சம்மன் சேமிப்புச் சான்றிதழ் திட்டம் 2 ஆண்டுகளில் முதிர்ச்சியடைகிறது. ஆனால் 1 வருடம் முடிந்த பிறகு பகுதியளவு பணத்தை எடுக்கலாம்.
தேவைப்பட்டால், 1 வருடம் கழித்து தொகையில் 40 சதவீதம் வரை எடுக்கலாம். இந்தத் திட்டத்தில் நீங்கள் ரூ. 2 லட்சம் டெபாசிட் செய்துள்ளீர்கள் என்று வைத்துக்கொண்டால் ஒரு வருடம் கழித்து ரூ. 80 ஆயிரம் எடுக்கலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |