ரூ.5 லட்சத்துக்கு மேல் வட்டி கிடைக்கும்.., அசத்தல் போஸ்ட் ஆபிஸ் திட்டம்
post office nsc scheme details- பாதுகாப்பான முதலீட்டையும், நிலையான வருமானத்தையும் விரும்புபவர்களுக்கு அஞ்சல் அலுவலக சேமிப்புத் திட்டங்கள் உதவியாக உள்ளன.
அரசு ஆதரவுடன் செயல்படுத்தப்படும் இத்திட்டங்களில், குறைந்த தொகையில் முதலீடு செய்ய முடியும்.
அந்தவகையில், அஞ்சலகத்தின் தேசிய சேமிப்புச் சான்றிதழ் திட்டம் (NSC) பிரபலமான சேமிப்புத் திட்டங்களில் ஒன்றாகும்.
இந்தத் திட்டத்தில் தற்போது ஆண்டுக்கு 7.7% வட்டி வழங்கப்படுகிறது. தேசிய சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தில் குழந்தைகளின் பெயரிலும் கணக்கு தொடங்க முடியும்.

10 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் கணக்கை பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் நிர்வகிக்கலாம்.
முதியவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு வயதினரும் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
தேசிய சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.1000 முதலீடு செய்து கணக்கைத் தொடங்கலாம். இந்தத் திட்டத்தில் கூட்டு வட்டி முறையில் வருமானம் கணக்கிடப்படுகிறது.
முதலீட்டுக்கான முதிர்வு காலம் 5 ஆண்டுகள் ஆகும். முழுமையான பலன்களைப் பெற, முதிர்வு காலம் வரை முதலீட்டைத் தொடர வேண்டும்.

மேலும், முதிர்வு காலத்திற்கு முன்பே கணக்கை மூடுவதற்கு சில விதிமுறைகளின்படி அனுமதி உள்ளது.
கணக்கு தொடங்கிய ஒரு வருடத்திற்கு பிறகு முன்கூட்டியே மூடப்பட்டால் வட்டி வழங்கப்படாது, முதலீடு செய்த அசல் தொகை மட்டுமே கிடைக்கும்.
இத்திட்டத்தில் ரூ.11.50 லட்சத்தை ஒரே தவணையாக முதலீடு செய்து, 5 ஆண்டுகள் தொடர்ந்து வைத்திருந்தால், ஆண்டுக்கு 7.7% வட்டி விகிதத்தின் அடிப்படையில் முதிர்வில் சுமார் ரூ.16.66 லட்சம் கிடைக்கும்.
இதில், முதலீட்டின் மீதான வட்டி வருமானம் மட்டும் சுமார் ரூ.5,16,389 ஆக இருக்கும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |