போஸ்ட் ஆபிஸ் RD திட்டத்தில் ரூ.8000 முதலீடு.., எவ்வளவு பணம் கிடைக்கும்?
எதிர்காலத்திற்காகச் சேமிக்க விரும்புபவர்கள் போஸ்ட் ஆபிஸின் தொடர் வைப்பு நிதித் திட்டத்தில் (RD) முதலீடு செய்யலாம்.
அரசு சார்ந்த இத்திட்டத்தில் சந்தை அபாயங்கள் இல்லாமல், நிர்ணயிக்கப்பட்ட வட்டி மூலம் வருமானம் பெறலாம்.
போஸ்ட் ஆபிஸ் தொடர் வைப்பு நிதித் திட்டம் என்பது மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையைச் சேமிக்கும் அரசு திட்டமாகும்.
ஒரே நேரத்தில் அதிக தொகையை முதலீடு செய்ய முடியாதவர்களுக்கு, மாதாந்திர சேமிப்பு முறையில் முதலீடு செய்யலாம்.

மனைவியின் பெயரில் மாதம் ரூ.8,000 முதலீடு செய்தால், 5 ஆண்டுகளில் ரூ.5.70 லட்சம் வரை பணத்தை உருவாக்கலாம்.
இத்திட்டத்தின் கால அளவு 5 ஆண்டுகள் அல்லது 60 மாதங்கள் ஆகும். இதில் மாதம் ரூ.100 முதல் முதலீடு செய்யலாம்.
வட்டி காலாண்டு அடிப்படையில் கூட்டு வட்டி முறையில் கணக்கிடப்படுகிறது. வட்டி விகிதத்தை மத்திய அரசு நிர்ணயிக்கிறது.
RD கணக்கைத் தொடங்கி மாதம் ரூ.8,000 முதலீடு செய்தால், 5 ஆண்டுகளில் மொத்தம் ரூ.4.80 லட்சம் சேமிக்கப்படும்.
வட்டியுடன் சேர்த்து முதிர்வின்போது சுமார் ரூ.5.70 லட்சம் கிடைக்கும். இதன் மூலம் சுமார் ரூ.90,000 வரை வட்டி வருமானம் கிடைக்கும்.
இந்தத் திட்டத்தில் வட்டி காலாண்டு அடிப்படையில் கூட்டு வட்டி முறையில் கணக்கிடப்படுகிறது. முதலீடு செய்த அசல் தொகையுடன், ஏற்கெனவே கிடைத்த வட்டிக்கும் வட்டி கணக்கிடப்படுகிறது.
மேலும், சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு கடன் பெறும் வசதியும் உள்ளது.
அவசரத் தேவைகளில் முதிர்வுக்கு முன்பாகக் கணக்கை முடித்துக்கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |