குடியை நிறுத்தி ஓராண்டு தினம்! வித்தியாசமாக போஸ்டர் அடித்த நபர்
குடியை மறந்த ஒருவர் தன்னைப்போல் மற்றவர்களும் திருந்தி வாழவேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் போஸ்டர் அடித்து ஊர் முழுவதும் ஒட்டிய சம்பவம் பலரையும் ஆச்சரியத்தியில் ஆழ்த்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி புவனேஸ்வரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன் (53) என்பவருக்கு திருமணமாகி 4 மகன்கள் உள்ளனர். இவர் இளநீர் வியாபாரம் செய்து வருகிறார்.
மதுவுக்கு அடிமை
கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக மனோகரன் மதுவுக்கு அடிமையாகி இருந்தால் அவர்கள் வீட்டில் அடிக்கடி தகராறு நடந்துவந்தது.
சம்பாதிக்கும் பணத்தையும் மது குடித்தே அழித்தார்.
கடந்த வருடம் குடிப்பதால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து கவலைப்பட்ட மனோகரன் குடியை நிறுத்த முடிவு செய்தார்.
குடியை நிறுத்த எடுத்த முயற்சி
அதன்பின் டைரி ஒன்றை எடுத்து அதில் தான் இறுதியாக குடித்த நாளை குறித்து வைத்தார்.
தொடர்ச்சியாக குடிக்காமல் சுமார் ஓராண்டு வரை இருந்து வந்துள்ளார்.
மது குடிக்கும் எண்ணம் தோன்றினால் டீ குடிப்பது, விரும்பிய உணவை சாப்பிடுவது போன்றவற்றில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் கடந்த ஓராண்டு காலத்தில் அவரது குடும்ப வாழ்க்கை சுமூகமாகச் சென்றதுடன், உடல் நலமும் ஆரோக்கியமாக இருந்தது.
போஸ்டர் அச்சடித்து ஒட்டினார்
அதன்பின் தன்னைப்போல் மதுவால் பாதிக்கப்பட்டுளள மற்றவர்களும் திருந்தி வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் செங்கல்பட்டு நகரில் குடியை மறந்து ஓராண்டு ஆகிவிட்டது என்ற தலைப்பிட்டு ஒரு போஸ்டரை அச்சடித்து ஒட்ட தொடங்கினார்.
அந்த போஸ்டரில்
மனோகரன் குடியை மறந்த முதலாமாண்டு தினம்.
குடியால கெட்டதட குடும்பங்கள் பல. அதை நீ மறந்தால் வாழ்ந்திடலாம் ஆண்டுகள் பல, மதுவை நீ குடித்தால் மரணம் உன்னை அழைக்கும், அதை நீ மறந்தால் உன் வாழ்க்கை உயரும் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த போஸ்டர்களை அச்சடிக்கடி உதவிய ஆத்தூரைச் சேர்ந்த ஆனந்த் என்பவரது பெயரையும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தகவல் அப்பகுதிகளில் பரவியது. மேலும் சமூக வலைதளங்களிலும் படுவேகமாக பரவியது.
இதையறிந்த மக்கள் அவரை பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.