இந்தியா-மியான்மர் எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
இந்தியா மற்றும் மியன்மார் எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
இந்தியா-மியான்மர் எல்லையில் இன்று அதிகாலை 5.15 மணியளவில் குறித்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் ரிக்டர் அளவுகோலில் 6.1 பதிவாகி உள்ளதாக இந்திய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தாமிசோரம் மாநிலம் தென்சால் பகுதியில் இருந்து 73 கி.மீ. தென்கிழக்கில் இந்த நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரிபுரா, மணிப்பூர், மிசோரம் மற்றும் அசாம், ஆகிய மாநிலங்களும் கொல்கத்தா மற்றும் பங்களாதேஷின் சிட்டகொங் ஆகிய தூரப்பகுதிகளில் உள்ள நகரங்களிலும் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இதனால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.