பிரித்தானியாவில் 17 வயது கர்ப்பிணி சிறுமிக்கு நேர்ந்த பரிதாபம்! 16 வயது சிறுவன் கைது..
பிரித்தானியாவில் டிராமில் மோதிய கார் விபத்துக்கு உள்ளானதில், அதிலிருந்த கர்ப்பிணி சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து இங்கிலாந்தின் Wolverhampton பகுதியில் பில்ஸ்டன் தெரு மற்றும் பைப்பர்ஸ் ரோ சந்திப்பில், புதைக்கிழமை அதிகாலை 6.30 மணியளவில் நடந்துள்ளது.
அப்போது, சில்வர் நிற Vauxhall கார் ஒன்று தாறுமாறாக வந்து, சிட்டி சென்டர் பகுதியில் சென்றுகொண்டிருந்த டிராம் மீது மோதி விபத்துக்கு உள்ளானது.
அந்த காரில் பின் இருக்கையில் பயணித்த கர்ப்பிணியான 17 வயது சிறுமி பலத்த காயங்களுடன் மயங்கிக்கிடந்தார். சமத்துவ இடத்துக்கு விரைந்த துணை மருத்துவர்கள் அச்சிறுமியை பிர்மிங்காமில் உள்ள குயின் எலிசபெத் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கு அவர் தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.
விபத்தை ஏற்படுத்திய அந்த காரை 16 வயது சிறுவன் ஓட்டிவந்தது தெரிவந்தது. அச்சிறுவனுக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்ட நிலையில், அவரும் New Cross மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை முடிந்த பிறகு அவரை கைது செய்து விசாரணை நடத்தவுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்த விபத்தானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.