"எல்லோரும் போய்விட்டார்கள்" கணவனும் குழந்தைகளும் ஆற்றில் விழுவதை பார்த்த கர்ப்பிணிப் பெண்
குஜராத் மோர்பி தொங்கு பாலம் அறுந்து விழுந்ததில் 141 பேர் உயிரிழந்த சம்பவம் இந்தியாவை உலுக்கியது.
பாலம் அறுந்து விழும்போது கணவர் மற்றும் 10 வயதுக்குட்பட்ட இரண்டு குழந்தைகள் ஆற்றில் விழுந்ததைக் கண்டு திகிலடைந்தார்.
குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே அமைந்த 100 ஆண்டுகள் பழமையான தொங்கு பாலம் அறுந்து விழுந்து விபத்திற்குள்ளானதில் 141 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் தனது கணவர், ஒன்பது வயது மகள் மற்றும் ஏழு வயது மகனுடன் தனது கண் முன்னிலையில் தண்ணீரில் விழுவதைப் பார்த்த கர்ப்பிணி பெண், தனது குடும்பத்தை பறிகொடுத்ததில் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளார்.
"எல்லாம் போய்விட்டது., என் மகன், என் மகள், எல்லோரும் போய்விட்டார்கள், நான் இப்போது தனியாக இருக்கிறேன், நான் எப்படி வாழ்வேன்?" என அப்பெண் பல மணி நேரங்களாக அழுதுகொண்டிருக்கிறார்.
NDTV
அப்பெண்ணின் தந்தை கூறுகையில், கூலித் தொழிலாளியான தனது மகளின் கணவர், நீண்ட நேரம் வேலை செய்வதால் குழந்தைகளை ஞாயிற்றுக்கிழமை வெளியே அழைத்துச் செல்ல முடிவு செய்தபோது இந்த சோக சம்பவம் நிகழ்ந்ததாக அவர் கூறினார்.
கர்ப்பிணியான தனது மகளுக்கு அரசு உதவும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார். அதிகாரிகளின் அலட்சியத்தால் இந்த சோகம் நடந்துள்ளது என்றும் அவர் கூறினார்.
NDTV
இதனிடையே, மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் குறுகிய கேபிள் பாலம் இடிந்து விழுந்ததாக குஜராத் தடயவியல் ஆய்வக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கப்பட்ட ஏழு மாத சீரமைப்புப் பணியின் போது, பாலத்தின் சில பழைய கேபிள்கள் மாற்றப்படவில்லை என்று வட்டாரங்கள் தெரிவித்தன.