பிரித்தானியாவில் கணவன் கண் முன்னே கர்ப்பிணி மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்! தாயை இழந்த 3 குழந்தைகள்..
பிரித்தானியாவில் கர்ப்பிணி பெண் ஒருவன் தனது கணவனுடன் படுக்கையில் பேசிக்கொண்டு இருக்கும்போதே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்துள்ளது.
இங்கிலாந்தின் வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் பகுதியில், Staffordshire கவுன்டியில் இருக்கும் Perton கிராமத்தில் இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.
Laura Bolon-Williams எனும் 36 வயது பெண்னுக்கு ஈத்தன் (18), அலெக்சாண்டர் (11) எனும் இரண்டு மகன்களும், கெய்ட்லின் எனும் 7 வயது மகளும் உள்ளனர். மேலும், அவர் தற்போது 4 மாதங்கள் கர்ப்பமாக இருந்தார்.
இந்தநிலையில், லாரா தனது கணவர் Scott Williams-உடன் படுக்கையில் நேருக்கு நேர் பார்த்தபடி பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, பேசிக்கொண்டு இருக்கும் போதே லாரா திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
பதறிப்போன ஸ்காட் அவசர உதவியை நாடினார். ஆனால், லாரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அவரது மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட்டு மரணம் நேர்ந்துள்ளது. அவர் கர்ப்பமாக இருந்த காரணத்தினால் இவ்வாறு நடந்திருக்கலாம் என ஸ்காட் கூறியுள்ளார்.
லாரா, முன்னதாக குழந்தை பராமரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார் மற்றும் சமீபத்தில் உதவி ஆசிரியராக தகுதி பெற்றுள்ளார்.
இந்த நிலையில், மனைவியை இழந்த சோகம் ஒருபக்க இருந்தாலும், அவரை எப்போது நினைவுகூறும் விதமாக ஸ்காட் சில செயல்களை செய்துள்ளார்.
லாராவின் பெயரில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் உதவியுடன், நன்கொடையின் மூலம் 13,000 பவுண்டுகளுக்கு மேல் பணம் திரட்டி குழந்தைகளுக்கான தொண்டு நிறுவனத்திற்கு கொடுத்துள்ளார்.
மேலும், அவர் தனது மறைந்த மனைவியைக் கவுரவிப்பதற்காக, லாரா பிடித்த பெர்டன் பள்ளியில் குழந்தைகள் விளையாடும் தோட்டத்தை புதுப்பித்துள்ளார். அதே பள்ளியில், லாராவின் மகள் கெய்ட்லின் தற்போது உணரலாம் வகுப்பை தொடங்கியுயள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.