கர்ப்பிணி பெண் இணையத்தில் தேடிய அந்த தகவல்... அதன் பின்னர் கணவனின் கொடுஞ்செயல்
அமெரிக்காவில் ஆறு வார கர்ப்பிணி மனைவியை கொடூரமாக கொலை செய்து விட்டு தலைமறைவான நபர் ஆயுளுக்கும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் மிசூரி மாகாணத்தை சேர்ந்த 31 வயது பியூ ரோத்வெல் என்பவரே திருமணம் முடித்து நான்கு ஆண்டுகளுக்கு பிறகு தமது மனைவியை கொன்றுள்ளார்.
சம்பவத்தின் போது ஜெனிபர் ரோத்வெல் ஆறு வார கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்த வழக்கில் தற்போது ஆயுள் தண்டனை அனுபவிப்பதுடன், பிணையில் அவர் வெளிவரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
திடீரென்று மாயமானதாக கணவரால் புகார் கூறப்பட்ட 28 வயது ஜெனிபரின் சடலம் ஒரு வாரத்திற்கு பின்னர் கண்டெடுக்கப்பட்டது. கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
மேலும், ஜெனிபர் மாயமானதாக புகார் அளிக்கப்படும் ஒரு நாளுக்கு முன்னர், ரோத்வெல் சுத்தப்படுத்தும் பொருட்களை அங்காடியில் இருந்து வாங்குவது கமெராவில் பதிவாகியிருந்தது பொலிஸ் விசாரணையில் தெரிய வந்தது.
இதனையடுத்து, 2019 நவம்பர் மாதம் தமது மனைவியை கொடூரமாக தாக்கியதை ரோத்வெல் ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து அவர் மீது முதல் நிலை கொலை வழக்கு பதியப்பட்டது.
மட்டுமின்றி, தமக்கு இன்னொரு பெண்ணுடன் ஏற்பட்டிருந்த தொடர்பு குறித்து ஏற்பட்ட கருத்து மோதலில் தாம் ஜெனிபரை தாக்கியதாகவும், ஆத்திரத்தில் நடந்த சம்பவம் அது எனவும், தமது மனைவியை திட்டமிட்டு தாக்கவில்லை எனவும் ரோத்வெல் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ஆனால், மொத்தமும் திட்டமிடப்பட்டதாகவும், தமது காதலியுடன் ரோத்வெல் பகிர்ந்து கொண்ட குறுந்தகவல்களை சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து வாதிட்டுள்ளனர்.
ஜெனிபர் கொல்லப்படுவதற்கு முன்னர், நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்பதை அறிந்து உங்கள் கணவர் வருத்தப்பட்டால் என்ன செய்வது என இணையத்தில் தகவல் திரட்டியுள்ளார்.
இதன் பின்னரே, ஜெனிபர் மாயமானதாக ரோத்வெல் பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார் என விசாரணையில் அம்பலமானது.