குரங்கம்மையால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணுக்கு பிறந்த குழந்தை! மருத்துவர்கள் வெளியிட்ட தகவல்
அமெரிக்காவில் குரங்கம்மை வைரஸால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஆரோக்கியமான குழந்தை பிறந்துள்ளது.
தற்போதைய வெடிப்பில் முதல்முறையாக, அமெரிக்காவில் ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு குரங்கம்மை வைரஸால் கண்டறியப்பட்டது. அப்பெண்ணுக்கு இப்போது ஆரோக்கியமான குழந்தை பிறந்துள்ளது. அரவும் மற்றும் அவரது குழந்தை இருவரும் நலமாக உள்ளனர் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) அதிகாரிகளின் கூற்றுப்படி, குழந்தை பாதுகாப்பாக பிரசவிக்கப்பட்டது மற்றும் பெண் மற்றும் குழந்தை இருவரும் 'நன்றாக உள்ளனர்' என்று CBS செய்தி தெரிவித்துள்ளது.
இதற்கு முன்பாக குரங்கம்மை பரவலின்போது, வைரஸால் பாதிக்கப்பட்ட கற்பிணிப் பெண்ணிடமிருந்து குழந்தைக்கும் நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. ஆனால், இம்முறை குழந்தைக்கு நோய் தாக்கியதாகத் தெரியவில்லை என CDC தெரிவித்துள்ளது.
CDC தரவுகளின்படி, கர்ப்பிணிப் பெண்களில் கடுமையான விளைவுகளுக்கு வழிவகுக்கும் குரங்கம்மையின் அதிர்வெண் குறைவாக உள்ளது மற்றும் அதைக் கண்டறிவது ஒரு சவாலாக உள்ளது. "கர்ப்பிணிகள், சமீபத்தில் கருவுற்றவர்கள் மற்றும் தாய்ப்பால் கொடுப்பவர்கள் தேவைப்பட்டால் மருத்துவ சிகிச்சைக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்" என்று நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
அமெரிக்காவில் இரண்டு குழந்தைகளுக்கு குரங்கம்மை தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பு (WHO) குரங்கம்மை வைரஸை உலகளாவிய சுகாதார அவசர நெருக்கடியாக அறிவித்துள்ளது.
இதுவரை, ஸ்பெயினில் தான் அதிக எண்ணிக்கையிலான தொற்றுகள் (3,596) பதிவாகியுள்ளன. இந்த வைரஸால் பாதிக்கப்படும் ஆபத்தில் உள்ள Gay ஆண்களுக்கு, இப்போதைக்கு பாலியல் கூட்டாளிகளை குறைத்துக்கொள்ளுமாறு WHO அறிவுறுத்தியுள்ளது.