கணவரின் கண் எதிரில் கர்ப்பிணிக்கு நடந்த துயரம்! மனதை கலங்க வைக்கும் கொடூர சம்பவம்
ஆரணி அருகே கர்ப்பிணி பெண் ஒருவர் பஸ் டயருக்குள் சிக்கி கொண்டு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி பகுதியில் வசித்து வருபவர் பாபு. இவர் தனியார் பள்ளி பேருந்து ஓட்டுநராக உள்ளார். இவரது மனைவி பிரியா(22). இந்த தம்பதிக்கு 3 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.
தற்போது பிரியா 7 மாதம் கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில் பாபு, அவரது மனைவி மற்றும் குழந்தை மூவரும் திருமண நிகழ்ச்சிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது பாபு வேகத்தடையில் ஏறி இறங்கிய போது பைக்கின் பின்னாடி உட்காந்திருந்த பிரியா எதிர்பாராதவிதமாக கீழே விழுந்துள்ளார். அப்போது அவருக்கு பின்னால் வந்த அரசு பேருந்தின் சக்கரத்தில் பிரியா சிக்கி கொண்டு சம்பவ இடத்திலே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் பிரியாவை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து ஆரணி பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவரின் கண்முன்னே பிரியா துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் அனைவரையும் கண்
கலங்க செய்துள்ளது.