3 மாதத்திற்கு மேற்பட்ட கர்ப்பிணிகளை பணிக்கு சேர்க்க இயலாது! SBI அறிவிப்பு
இந்தியாவில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி 3 மாதத்திற்கு மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் பணிக்கு சேர்க்கப்படமாட்டார்கள் என அறிவித்துள்ளது.
புதிய பணியாளர் சேர்க்கை மற்றும் பதவி உயர்விற்கான மருத்துவ தகுதி வழிகாட்டு வெளியிட்டுள்ள விதிகளிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் படி ஒரு பெண் 3 மாதத்திற்கு மேற்பட்ட கர்ப்பிணியாக இருந்தால் அவர் பணியில் சேர தகுதியில்லை எனவும் குழந்தை பெற்ற பின் 4 மாதம் கழித்தே பணியில் சேர தகுதியுள்ளவர்கள் ஆவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பதவி உயர்விற்கும் இதே விதி பொருந்தும் என வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனினும் இது பெண்கள் உரிமையை பறிக்கும் செயல் என ஊழியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இவ்விதி கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பே கொண்டு வரப்பட்டு கடும் எதிர்ப்பு காரணமாக திரும்பப் பெறப்பட்டது என்றும் தற்போது மீண்டும் அவ்விதி கொண்டு வரப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.