திருமணத்துக்கு முந்தைய மனைவியின் ரகசியத்தை கண்டுபிடித்த கணவன்! அதிர்ச்சியடைந்த 7 மாத கர்ப்பிணி செய்த விபரீத காரியம்
தமிழகத்தில் திருமணத்திற்கு முந்தைய காதல் ரகசியம் கணவனுக்கு தெரிந்ததால் 7 மாத கர்ப்பிணி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோபி அருகே வெள்ளாள பாளையத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர். விவசாயம் செய்து வருகிறார். இவரது மகள் செல்வநாயகியை (24), பொலவக்காளி பாளையம் அருகே உள்ள பெருமாக்கவுண்டன் வலசை சேர்ந்த செந்தில்குமார் என்பவரின் மகன் கமல்பிரசாத்துக்கு கடந்த ஆண்டு திருமணம் செய்து வைத்துள்ளார்.
கமல் பிரசாத் கட்டிடங்களுக்கு இன்டீரியர் டிசைனராக உள்ளார். செல்வநாயகி திருமணத்திற்கு முன் வேறு ஒருவருடன் பழகி வந்துள்ளார். மகள் வேறு ஒருவரை காதலித்து வருவதை அறிந்த அவரது பெற்றோர் அவசர அவசரமாக கமல்பிரசாத்திற்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.
செல்வநாயகி தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் செல்வநாயகியின் காதல் குறித்து கடந்த நான்கு நாட்களுக்கு முன் கணவர் கமல்பிரசாத்திற்கு தெரிய வந்துள்ளது.
அதைதொடர்ந்து தனது மனைவியிடம், திருமணத்துக்கு முன் காதல் விவகாரத்தை கூறி இருக்கலாமே என்று கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த செல்வநாயகி தனது காதல் கணவருக்கு தனது முந்தைய வாழ்க்கை ரகசியம் தெரிய வந்ததால் காலம் முழுவதும் மன உலைச்சலுடனே வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டதாக நினைத்து வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
மனைவி உயிரிழந்ததை அறிந்த கமல்பிரசாத் விஷம் குடித்து விட்டு கோவையில் இருந்து கோபி் நோக்கி காரில் வேகமாக சென்று, தெக்கலூரில் லாரி மீது காரை மோதி உள்ளார். இதில் படுகாயமடைந்த கமல்பிரசாத், கோபியிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.