ஐபிஎல்லில் நடுவரின் தவறான முடிவு: பஞ்சாப் கிங்ஸ் உரிமையாளர் பிரீத்தி ஜிந்தா அதிருப்தி
ஐபிஎல்லில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் உரிமையாளர் பிரீத்தி ஜிந்தா, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் நடுவரின் தவறான முடிவால் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் சீசனின் 66வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் பேட்டிங் செய்தபோது, டிவி நடுவர் சிக்ஸர் கொடுக்க மறுத்தது குறித்து தனது கருத்தை பிரீத்தி ஜிந்தா வெளிப்படுத்தினார்.
X தளத்தில் கருத்து பதிவு
இதுகுறித்து X தளத்தில் ப்ரீத்தி ஜிந்தா, "ஐபிஎல் போன்ற ஒரு கிரிக்கெட் தொடரில் நடுவர்களுக்கு ஏராளமான தொழில்நுட்ப வசதிகள் இருந்தும், இது போன்ற தவறுகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை.
In a such a high profile tournament with so much technology at the Third Umpire’s disposal such mistakes are unacceptable & simply shouldn’t happen. I spoke To Karun after the game & he confirmed it was DEFINITELY a 6 ! I rest my case ! #PBKSvsDC #IPL2025 https://t.co/o35yCueuNP
— Preity G Zinta (@realpreityzinta) May 24, 2025
இது நடந்திருக்கக் கூடாது. ஆட்டத்திற்குப் பிறகு கருண் நாயரிடம் பேசினேன். அது சிக்ஸர் தான் என்று அவர் உறுதியாகத் தெரிவித்தார்," எனக் குறிப்பிட்டுள்ளார்.
சர்ச்சைக்குரிய சம்பவம்: என்ன நடந்தது?
ஜெய்ப்பூரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்ஸின் 15வது ஓவரின் கடைசி பந்தை பஞ்சாப் அணியின் ஷஷாங்க் சிங் லாங்-ஆன் திசையில் சிக்ஸர் அடிக்கும் வகையில் விளாசி இருந்தார்.
அந்தப் பந்தை பவுண்டரி லைன் அருகே இருந்த கருண் நாயர் தடுக்க முயன்றார். இருப்பினும், அவரது சமநிலையை இழந்ததால், பந்தை உள்நோக்கித் தட்டிவிட்டார். அது சிக்ஸர் என அவரே சிக்ஸர் என சைகை மூலம் தெரிவித்தார்.
அவரது கால் பவுண்டரி லைனை தொட்டிருக்கலாம் என்று அவர் எண்ணியதால் இப்படி செய்தார்.
இந்த நிலையில், டிவி நடுவர் அதை பரிசீலித்த போது, கருண் நாயரின் கையில் பந்து இருந்தபோது, அவரது கால்கள் பவுண்டரி லைனை தொட்டதற்கான ஆதாரம் எதுவும் இல்லை எனக் கருதி சிக்ஸர் கொடுக்கவில்லை.
பஞ்சாப் பேட்ஸ்மேன்கள் எடுத்த ஒற்றை ஓட்டம் மட்டுமே அந்த பந்தில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த முடிவு ஐபிஎல் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த கிரிக்கெட் போட்டிகளில் நடுவர் முடிவுகளின் துல்லியம் மற்றும் தொழில்நுட்ப பயன்பாடு குறித்த விவாதங்களைத் தூண்டியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |