திடீரென மோடியை புகழ்ந்த பிரேமலதா.., கூட்டணிக்கு முயற்சியா?
விஜயகாந்தை தமிழகத்தின் சிங்கம் என்று மோடி அன்பாக அழைப்பார் என்று பிரேமலதா கூறியுள்ளார்.
மோடிக்கு புகழாரம்
எந்த கட்சியுடனும் தற்போது கூட்டணியில் இல்லை என்று கடந்த வாரம் பிரேமலதா கூறி இருந்தார். இதனிடையே தான் அதிமுக பாஜக கூட்டணி மீண்டும் உருவாகியுள்ளது.
இந்நிலையில் இந்த கூட்டணிக்குள் தேமுதிகவையும் கொண்டு வருவதற்கான வேலைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனிடையே பிரேமலதா விஜயகாந்த் சமூக வலைத்தளம் ஒன்றிற்கு பேட்டி அளிக்கையில், "கேப்டன் விஜயகாந்த் திரையுலகத்திலும், அரசியலிலும் உயர்ந்த ஆளுமை மட்டுமல்லாமல் பலரது அன்பையும் பெற்றுள்ளார்.
விஜயகாந்தை தமிழகத்தின் சிங்கம் என்று மோடி அன்பாக அழைப்பார். மோடிக்கும், விஜயகாந்துக்கும் இடையிலான உறவு அரசியலை தாண்டிய ஒன்று ஆகும்.
விஜயகாந்த் உடல்நலக்குறைவாக இருந்தபோது அடிக்கடி தொடர்பு கொண்டு மோடி நலம் விசாரிப்பார். இவர்களின் நட்பு பரஸ்பர மரியாதை மற்றும் அன்பினால் கட்டமைக்கப்பட்டு இருந்தது" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |