பெரும் எதிர்பார்ப்புடன் முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்ட விஜயகாந்த் மனைவி பிரேமலதா நிலை என்ன? வெளிவந்த தகவல்
தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட விஜயகாந்த் மனைவி பிரேமலதா பின்னடைவை சந்தித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது.
இதில் விருதாச்சலம் தொகுதியில் தேமுதிகவின் சார்பில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா முதல்முறையாக போட்டியிட்டுள்ளார்.
அதே போல திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ராதாகிருஷ்ணனும், அதிமுக கூட்டணி சார்பில் பாமகவின் கார்த்திகேயனும் போட்டியிட்டனர்.
தற்போதைய நிலவரப்படி விருதாச்சலத்தில் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகிக்கும் நிலையில் பிரேமலதா பெரும் பின்னடைவை சந்தித்துள்ளார்.