உங்க வெள்ளை முடியை கருமையாக்கனுமா? அப்போ இந்த விதைகளை இப்படி பயன்படுத்துங்க!
பொதுவாக இன்றைய காலத்தில் பலர் வெள்ளை முடி பிரச்சினையால் அவதிப்பட்டு வருகிறார்கள்.
நரைமுடி வருவதற்கு மருத்துவரீதியாக முன்மையான காரணம் என்னவென்றால், முடிக்கு கருப்பு நிறத்தை வழங்கும் மெலனின் என்னும் நிறமி குறைவாக இருப்பது தான்.
இந்த மெலனினானது வயதாக ஆகத் தான் குறைய ஆரம்பிக்கும். ஆனால் தற்போது இந்த மெலனின் சிறு வயதினருக்கே குறைய ஆரம்பித்து நரைமுடியை ஏற்படுத்திவிடுகிறது.
இதனை கருமையாக்க விலையுயர்ந்த பொருட்கள் தேவையில்லை, இயற்கையான முறையில் வெள்ளை முடியை மீண்டும் கருமையாக்கலாம். அதற்கு ஆளிவிதைகள் பெரிதும் உதவுகின்றது. தற்போது அவை எப்படி என பார்ப்போம்.
தேவையானவை
- ஆளிவிதை - ஒரு கப்
- தண்ணீர் - 4 கப்
செய்முறை
- 4 கப் தண்ணீரில் ஒரு கப் ஆளிவிதையை எடுத்துக்கொள்ளவும், இப்போது அவற்றை நன்கு கொதிக்கவைத்து, பருத்தி துணியில் போர்த்தி விதைகளை பிழியவும்.
- இப்போது அதில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் கற்றாழை ஜெல்லை கலந்து பயன்படுத்தவும்.
- ஆளிவிதையின் ஹேர் மாஸ்க்கை தயார் செய்து தலைமுடியில் தடவி அதை ஊற வைக்கவும், பின்னர் அதை சுத்தமான தண்ணீரில் கழுவவும்.
- இப்படி தொடர்ந்து செய்து வந்தால், சில நாட்களில் வெள்ளை முடி மீண்டும் கருப்பாக மாற ஆரம்பிக்கும்.