கச்சா எண்ணெய் விலை உயர்வால் பிரீமியம் பெட்ரோல் விலை அதிகரிப்பு
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் மற்றும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு காரணமாக, இந்தியாவில் பிரீமியம் பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்தியாவின் முக்கிய எண்ணெய் நிறுவனங்கள், மார்ச் 20 முதல் புதிய விலையை அமுல்படுத்தியுள்ளன. ஆனால், சாதாரண பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 119 அமெரிக்க டொலர் வரை உயர்ந்துள்ளது.
இதனால், இந்தியா போன்ற அதிக எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள் நேரடியாக பாதிக்கப்படுகின்றன. இந்தியா தனது எண்ணெய் தேவையின் 89 சதேவீதம் இறக்குமதி செய்கிறது.

பிரீமியம் பெட்ரோல் விலை உயர்வு, பெரும்பாலும் உயர்தர வாகனங்களை பயன்படுத்தும் நுகர்வோருக்கு கூடுதல் சுமையாக இருக்கும். ஆனால், சாதாரண எரிபொருள் விலை நிலைத்திருப்பதால், பொதுமக்களுக்கு உடனடி தாக்கம் குறைவாக இருக்கும்.
கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்தால், அடுத்த மாதங்களில் சாதாரண எரிபொருளின் விலையும் உயரக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இது பணவீக்கம் மற்றும் பொருளாதார சுமையை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
இந்திய அரசு, விலை நிலைத்தன்மையை பேணுவதற்காக சுங்க வரி மற்றும் உள்நாட்டு உற்பத்தி கொள்கைகளை பரிசீலித்து வருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Premium petrol price hike India, Crude oil price Middle East tensions, Petrol diesel price, India fuel price increase, Petrol price news today #PetrolPrice #FuelHike #CrudeOil