பிரித்தானிய மன்னரை இலங்கைக்கு அழைத்த ஜனாதிபதி ரணில் - அழைப்பு ஏற்றுக்கொள்ளப்படுமா?
பிரித்தானியா மன்னர் மூன்றாம் சார்ள்ஸ் மன்னரை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) அழைத்துள்ளார்.
மன்னரை இலங்கைக்கு அழைத்த ஜனாதிபதி
நேற்று பக்கிங்ஹாம் (Buckingham) அரண்மனையில் நடைபெற்ற சம்பிரதாய நிகழ்வில் கலந்துக்கொண்ட ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ரோஹித போகொல்லாகம (Rohitha Bogollagama) அழைப்பு கடிதத்தை வழங்கியுள்ளார்.
இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் ரோஹித போகொல்லாகம தனது மனைவியுடன்ரோயல் மியூஸ் பாரம்பரிய குதிரை வண்டிகள் மூலம் அரண்மனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
இதன்போது இலங்கை ஜனாதிபதி சார்பில் இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு மன்னருக்கு உயர்ஸ்தானிகர் அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும் மூன்றாம் சார்ள்ஸ் மன்னரிடம் நற்சான்றிதழ்களை வழங்கிய முதலாவது இலங்கை உயர்ஸ்தானிகர் ரோஹித போகொல்லாகம என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |