திடீரென உக்ரைன் தலைநகர் வந்திறங்கிய ஜேர்மன் ஜனாதிபதி...
ஜேர்மன் ஜனாதிபதி உக்ரைன் தலைநகருக்கு சர்ப்ரைசாக வருகை புரிந்துள்ளார்.
ரஷ்யா உக்ரைன் பிரச்சினை துவங்கியபின் ஜேர்மன் ஜனாதிபதி உக்ரைன் வருவது இதுவே முதல் முறையாகும்.
ஜேர்மனியின் ஜனாதிபதியாகிய Frank-Walter Steinmeier, திடீரென உக்ரைன் தலைநகர் கீவ்வுக்கு வருகைபுரிந்துள்ளார்.
உக்ரைன் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளால் தாக்குதலுக்குள்ளாகிவரும் இந்த நேரத்தில் உக்ரைனியர்களுக்கு ஜேர்மனியின் ஆதரவைக் காட்டுவதற்காக உக்ரைனுக்கு வருவது எனக்கு அவசியமான ஒன்றாகும் என்றார் அவர்.
Steinmeierஇன் செய்தித்தொடர்பாளரான Cerstin Gammelin அவரது படம் ஒன்றைப் பதிவிட்டு, அதனுடன், ’எங்கள் ஒற்றுமை உடைக்கமுடியாதது, அது அப்படியே நீடிக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
Steinmeier ஏற்கனவே இரண்டு முறை உக்ரைனுக்கு வருவதற்காக எடுத்த முயற்சிகள் பல்வேறு காரணங்களால் தோல்வியில் முடிய, இப்போதுதான் அவரால் கீவ்வுக்கு வரமுடிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.