சார்லஸ் மன்னராக கூடாது... வீட்டில் இருந்தே கிளம்பிய கடும் எதிர்ப்பு: வெடிக்கும் புதிய சர்ச்சை
இளவரசர் ஆண்ட்ரூ தற்போது செயல்படாத ராஜகுடும்பத்து உறுப்பினர்கள் வரிசையில் இருப்பவர்.
அரியணை ஏற காத்திருக்கும் இரு இளவரசர்களுக்கு இடையேயான பகையே இவர்கள் இடையே இருந்தது
சார்லஸ் பிரித்தானிய மன்னராவதை தடுக்க அவரது குடும்பத்தில் இருந்தே கடும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டதாக புதிய தகவல் ஒன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சார்லஸ் மன்னரின் சகோதரரும், ராஜகுடும்பத்தில் மொத்த பொறுப்புகளில் இருந்தும் மறைந்த ராணியாரால் நீக்கப்பட்ட இளவரசர் ஆண்ட்ரூவே இதன் பின்னணியில் செயல்பட்டவர் என அம்பலமாகியுள்ளது.
@getty
ராணியாரின் மறைவை அடுத்து இளவரசர் ஆண்ட்ரூ மீண்டும் பொதுமக்கள் பார்வைக்கு அடிக்கடி தெரியத்தொடங்கியுள்ளார். வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் முன்னெடுக்கப்பட்ட ராஜகுடும்பத்தினரின் சிறப்பு காவல் நிகழ்விற்கு இராணுவ உடையில் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டதும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.
62 வயதான இளவரசர் ஆண்ட்ரூ தற்போது செயல்படாத ராஜகுடும்பத்து உறுப்பினர்கள் வரிசையில் இருப்பவர். அதனாலையே ராணியாரின் இறுதி ஊர்வலத்தில் பொதுமக்களுக்கான துக்க உடையில் காணப்பட்டார்.
கிரெனேடியர் காவலர்களின் கர்னல் உட்பட அவரது சிறப்பு இராணுவப் பொறுப்புகள் அனைத்தையும் ராணியாரால் பறிக்கப்பட்டது. மட்டுமின்றி, இளவரசர்களுக்கான HRH பட்டத்தையும் அவர் துறக்க நேர்ந்தது.
@getty
இருப்பினும் வைஸ் அட்மிரல் என்ற பட்டத்தை மட்டும் தக்கவைத்துள்ளார். இதனால் கிடைத்த பதக்கங்களை சூடிக்கொள்கிறார். இந்த நிலையில், வெளியாகவிருக்கும் புதிய புத்தகம் ஒன்றில், பிரித்தானிய ராஜகுடும்பத்தின் மூத்த உறுப்பினர்களை கமிலா எவ்வாறு வென்றார் எனவும் சார்லஸ் மன்னராவதை ஆண்ட்ரூ ஏன் தடுத்து நிறுத்த முயன்றார் எனவும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
உண்மையிலேயே மன்னர் சார்லஸுக்கும் ஆண்ட்ரூவுக்கும் ஆகாது என்றே கூறப்படுகிறது. இருவரும் ஒன்றாக காணப்பட்டதும் இல்லை என்றே கூறுகின்றனர். அரியணை ஏற காத்திருக்கும் இரு இளவரசர்களுக்கு இடையேயான பகையே இவர்கள் இடையே இருந்தது எனவும் கூறப்படுகிறது.
@getty
ஆனால் ராணியாரின் செல்லப்பிள்ளை இந்த ஆண்ட்ரூ இளவரசர். மட்டுமின்றி சார்லஸ்- கமிலா திருமணம் தொடர்பில் ராணியார் ஆலோசனை பெற்ற பலரில் ஆண்ட்ரூவும் ஒருவர். மேலும், சார்லஸ்- கமிலா திருமணத்தை தடுத்து நிறுத்த தன்னால் இயன்ற அனைத்தையும் இளவரசர் ஆண்ட்ரூ முன்னெடுத்ததாக கூறப்படுகிறது.
மட்டுமின்றி, கமிலா தொடர்பில் மிக இழிவாக ராணியாரிடமும் புகார் அளித்துள்ளார் இளவரசர் ஆண்ட்ரூ. டயானா உயிருடன் இருந்த காலத்தில், ஆண்ட்ரூவின் முன்னாள் மனைவி சாராவுடன் நெருக்கமாக இருந்துள்ளார்.
@getty
இந்த வாய்ப்பை பயன்படுத்தி, சார்லசை ஒதுக்கிவிட்டு, இளவரசர் வில்லியமை நாட்டின் மன்னராக முடிசூட்டவும் அவருக்கு பிரதிநிதியாக தாம் பொறுப்பேற்க வேண்டும் என்ற சூழ்ச்சி வலையை ஆண்ட்ரூ பின்னியதாகவும் அம்பலமாகியுள்ளது.
இதனால் ராணியார் காலமானால், அவருக்கு அடுத்து நாட்டின் மன்னராக சார்லஸ் அல்ல வில்லியம் முடிசூட வேண்டும் என்று அப்போதே திட்டமிட்டு செயல்பட்டுள்ளார்.
ஆனால், ராணியாரிடம் இவரது திட்டங்கள் அனைத்தும் சுக்கலாக உடைந்தது என்கிறார்கள்.