பின்னடைவை சந்தித்த பிரதமர் மோடி... மீண்டும் வாரணாசியில் முன்னிலை!
வாரணாசியில் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வந்த பிரதமர் மோடி தற்போது முன்னிலைக்கு சென்றுள்ளார் என தெரியவந்துள்ளது.
வாரணாசியில் முன்னிலைக்கு சென்ற பிரதமர் மோடி
ஏழுக்கட்டங்களாக நடைபெற்று வந்த மக்களவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கையானது காலை 8 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டது.
இதில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி பின்னடைவுக்கு சென்றார். கேரள மாநில வயநாட்டில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி முன்னிலையில் உள்ளார்.
இந்நிலையில் தற்போதைய நேரத்தில் நிலவரப்படி, வாரணாசியில் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வந்த பிரதமர் மோடி, தற்போது 13638 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலைக்கு சென்றுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |