கர்ப்பிணிப்பெண்ணின் உடலை ஆபாசமாக வர்ணித்ததாக பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூ மீது குற்றச்சாட்டு
கர்ப்பமுற்றதால் உடல் பெருத்த பெண் ஒருவரை ஆபாசமாக வர்ணித்ததாக, பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூ குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
பருவம் அடையாத சிறுமிகள் முதல் ஏராளமான இளம்பெண்களை சீரழித்த அமெரிக்க கோடீஸ்வரரான Jeffrey Epstein என்பவருக்கும், பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூவுக்கு தொடர்பு இருப்பதாக செய்திகள் வெளியானதால் ராஜ குடும்பமும் பிரித்தானிய மக்களும் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
அதைத் தொடர்ந்து, விர்ஜினியா ராபர்ட்ஸ் என்று அழைக்கப்படும் Virginia Giuffre என்ற அமெரிக்க அவுஸ்திரேலிய பெண், தனக்கு 17 வயதே இருக்கும்போது, இளவரசர் ஆண்ட்ரூ தன்னுடல் உடல் ரீதியான உறவு வைத்துக்கொண்டதாக குற்றம் சாட்ட, அந்த வழக்கால் ராஜ குடும்பத்தையே பிரியும் நிலைக்கு ஆளாகியுள்ளார் ஆண்ட்ரூ.
இந்நிலையில், அவரைக் குறித்து தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணம் உள்ளன.
சிறுமிகளை சீரழித்து, பலருக்கு விருந்தாளியாக்கிய ஜெஃப்ரி எப்ஸ்டீனின் கூட்டாளியாகிய Ghislaine Maxwellஉடனும் ஆண்ட்ரூ உடல் ரீதியாக உறவு வைத்துக்கொண்டதாக சமீபத்தில் ஒரு தகவல் வெளியானது.
தற்போது, மற்றொரு அதிர்ச்சியளிக்கும் செய்தி வெளியாகியுள்ளது. ஆண்ட்ரூ, எப்போதுமே பெண்களின் உடல் மீதான ஆர்வம் கொண்டவர் என்றும், கர்ப்பமுற்றதால் மார்பகங்கள் பெருத்திருந்த ஒரு பெண்ணை அவர் ஆபாசமாக வர்ணித்ததாகவும் கடுமையான அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் அவமானத்தில் தலைகுனிந்ததாகவும், 2015ஆம் ஆண்டே ஆண்ட்ரூ குறித்து வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தற்போது The Sun பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தப் பெண்ணின் மார்பகங்களை ஆபாசமாக வர்ணித்த ஆண்ட்ரூ, பள்ளிக்கூடத்தில் படிக்கும் பையனைப்போல விழுந்து விழுந்து சிரித்ததாகவும் அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இளவரசர் ஆண்ட்ரூ, இளவரசர் பிலிப்புக்கும், பிரித்தானிய மகாராணியார் எலிசபெத்துக்கும் பிறந்த மூன்றாவது பிள்ளையும், இளவரசர் சார்லஸின் சகோதரும் ஆவார்.