இந்தியாவால் மிகுந்த வருத்தத்தில் பிரித்தானியா இளவரசர் சார்லஸ்!
இந்தியாவில் கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தால் தான் மிகுந்த வருத்தமடைந்துள்ளதாக பிரித்தானியா இளவரசர் சார்லஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இளவரசர் சார்லஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு வருடத்திற்கும் மேலாக இந்த தொற்றுநோய் உலகெங்கிலும் உள்ள நம்மில் பலருக்கு பேரழிவு தரக்கூடிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வாரம், கொரோனா இந்தியாவில் ஏற்படுத்தியுள்ள கொடூரமான தாக்கத்தை வெளிப்படுத்தும் துயரமான புகைப்படங்களை பாரத்து நான் மிகவும் வருத்தமடைந்தேன்.
பலரைப் போலவே, எனக்கு இந்தியா மீது மிகுந்த அன்பு உண்டு, அந்நாட்டிற்கு பல அற்புதமான பயணங்களை மேற்கொண்டுள்ளேன். இந்தியாவின் உதவிகளும் புத்தி கூர்மையும் இந்த மிகக் கடினமான நேரத்தில் மற்ற நாடுகளுக்கு ஒரு ஆதரவாக இருந்து வருகிறது.
இந்தியா மற்றவர்களுக்கு உதவியது போல, இப்போது நாம் இந்தியாவுக்கு உதவ வேண்டும்.
இந்த பயங்கரமான சூழ்நிலையில் ஏதாவது செய்ய வேண்டும் மற்றும் உயிர்களைக் காப்பாற்ற உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் பிரிட்டிஷ் ஆசிய அறக்கட்டளை இந்திய புலம்பெயர்ந்தோரின் ஆதரவுடன் இந்தியாவுக்காக அவசர உதவிகோரலை தொடங்கியுள்ளது.
புலம்பெயர்ந்தோர் உறுப்பினர்கள் பலர் மற்றும் வணிகங்கள், அறக்கட்டளைகள் மற்றும் அமைப்புகள் உட்பட பலர் ஏற்கனவே இந்த உதவிகோரலுக்கு ஆதரித்துள்ளனர்.
இந்தியாவில் உள்ளவர்களுக்கு தேவையான நேரத்தில் உதவுவதற்கு நம்மில் இன்னும் பலர் ஆதரவை வழங்க முடியும் என்று நான் நம்புகிறேன்.
“Indian aid and ingenuity has been a support to other countries through this immensely difficult time. As India has helped others, so now must we help India. I would also want those suffering the effects of this pandemic in India to know that they are in my thoughts and prayers.”
— The Prince of Wales and The Duchess of Cornwall (@ClarenceHouse) April 28, 2021
இந்தியாவில் தொற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களுக்காக நான் பிரார்த்திக்கிறேன். ஒன்றாக, நாம் இந்த போரில் வெற்றி பெறுவோம் என பிரித்தானியா இளவரசர் சார்லஸ் தெரிவித்துள்ளார்.