யூரோ இறுதிப்போட்டி! படுசந்தோஷமாக இருந்த இளவரசர் ஜார்ஜ் சோகமாய் நின்ற கலங்க வைக்கும் புகைப்படங்கள்
யூரோ கால்பந்து போட்டியை உற்சாகத்துடன் பார்த்துக்கொண்டிருந்த ஆயிரக்கணக்கான பிரித்தானியர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் விதத்தில் காணப்பட்ட இளவரசர் வில்லியமுடைய மகன் இளவரசர் ஜார்ஜின் புகைப்படங்கள் கவனம் ஈர்த்துள்ளன.
ஜேர்மனியை இங்கிலாந்து வென்ற மகிழ்ச்சியில், உற்சாகத்துடன் இத்தாலியுடனான இறுதிப்போட்டியைக் காண ஆவலுடன் காத்திருந்தது பிரித்தானியா.
ஆனால், ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் முடிவடைய, பெனால்டி அடிப்படையில் வெற்றியை முடிவு செய்ய தீர்மானிக்கப்பட்டது.
இங்கிலாந்து வீரர்கள் தொடர்ந்து கோட்டைவிட, வெற்றிக்கோப்பை இத்தாலியின் கைகளுக்குச் சென்றுவிட்டது. மகிழ்ச்சியிலிருந்த பிரித்தானியர்கள் முகம் வாடிப்போயினர்.
அப்படியே மொத்த பிரித்தானியாவின் உணர்வுகளையும் பிரதிபலித்துக்கொண்டிருந்த இளவரசர் ஜார்ஜும் முகம் வாடிப்போனார்.
அவரை தந்தை இளவரசர் வில்லியம் தோள்களில் கைவைத்து ஆறுதல் கூறித்தேற்ற, தாய் இளவரசி கேட்டோ, சோகம் தாங்காமல் தன் முகத்தை கைகளுக்குள் புதைத்துக்கொண்டார். வெளியாகியுள்ள புகைப்படங்களில் உற்சாகத்திலிருந்து சோகத்துக்கு மாறும் இளவரசர் ஜார்ஜின் பல்வேறு உணர்வுகளைக் காணலாம்.