தன் தவறுகளால் மகன் பாதிக்கப்பட்டதை நன்கறிந்துள்ள சார்லஸ்: விரைவில் மீண்டும் சந்திக்க திட்டம்
மன்னர் சார்லசும், இளவரசர் ஹரியும் விரைவில் சந்திக்க இருப்பதாக ராஜ குடும்ப நிபுணர்களும் அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்தவர்களும் தெரிவித்துள்ளார்கள்.
ஹரி செய்யவேண்டிய ஒரே விடயம்
மீண்டும் தன் தந்தையுடன் ஒப்புரவாக, இளவரசர் ஹரி ஒரே விடயத்தைச் செய்தால் போதும் என ராஜ குடும்ப நிபுணர்களும் அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்தவர்களும் கருதுகிறார்கள்.
TIM GRAHAM PHOTO LIBRARY VIA GETTY IMAGES
அதாவது, ஹரி மனதார தன் தந்தையிடம் மன்னிப்புக் கேட்டால் போதும், மன்னர் மனம் உருகி மகனை மன்னித்துவிடுவார் என அவர்கள் நம்புகிறார்கள்.
தன் தவறுகளால் மகன் பாதிக்கப்பட்டதை நன்கறிந்துள்ள சார்லஸ்
அத்துடன், தான் தனது திருமண வாழ்வில் செய்த தவறுகள், தன் மனைவியும் ஹரியின் தாயுமான இளவரசி டயானாவுக்கு செய்த துரோகம் முதலான விடயங்கள் மகனுடைய வாழ்வில் ஏற்படுத்திய தாக்கம் அவர் அறிந்ததே. மேலும், மகன் கடினமான ஒரு வாழ்வை இள வயதில் சந்தித்தற்கு தானும் ஒரு காரணம் என மன்னர் சார்லஸ் உணர்ந்துள்ளதால், இளவரசர் வில்லியமைவிட மன்னர் சார்லசால் மகன் ஹரியை எளிதாக மன்னிக்க முடியும் என ராஜ குடும்ப நிபுணர்களும் அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்தவர்களும் கருதுகிறார்கள்.
PASCAL LE SEGRETAIN/GETTY IMAGES/TIM GRAHAM PHOTO LIBRARY VIA GETTY IMAGES
ஆனாலும், ஒரே ஒரு பிரச்சினை உள்ளது. ஹரியிடம் என்ன சொன்னாலும் அவர் அமெரிக்காவுக்குச் சென்ற உடன் அதை ஊடகவியலாளர்களிடம் சொல்லிவிடுவார் என்னும் ஒரு பயம் ராஜ குடும்பத்தினரிடையே உள்ளது.
GETTY IMAGES
ஆகவே, மன்னர் சார்லஸ் மகனை சந்திக்கவேண்டும், அதே நேரத்தில், அந்த சந்திப்பு நீண்ட சந்திப்பாக இருக்கக் கூடாது என அவர்கள் கருதுகிறார்கள். எனவே, மன்னரும் ஹரியும் அடுத்து சந்திக்கவிருக்கும் சந்திப்பு, குறுகிய நேர சந்திப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |