இளவரசர் ஹரி என்னை திருமணம் செய்வதாக சத்தியம் செய்து ஏமாற்றிவிட்டார்! ஆதராங்களை காட்டி பரபரப்பை கிளப்பிய இந்திய பெண்
இளவரசர் ஹரி தன்னை திருமணம் செய்வதாக சத்தியம் செய்து ஏமாற்றிவிட்டதாக இந்திய பெண் ஒருவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வழக்கறிஞர் Palwinder Kaur என்ற பெண்ணே இந்தியாவின் பஞ்சாப் உயர் நீதிமன்றத்தில் இவ்வாறு மனு தாக்கல் செய்துள்ளார்.
இளவரசர் ஹரியுடன் மின்னஞ்சல் மூலம் பழகிவந்ததாகவும், அவர் தன்னை திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்தார் என கூறிய Kaur, மின்னஞ்சல் உரையாடல்களை ஆதாரமாக நீதிமன்றத்தில் சமர்பித்துள்ளார்.
மேலும், சத்தியத்தை நிறைவேற்ற தவிறய இளவரசர் ஹரி மீது நடவடிக்கை எடுக்குமாறு பிரிட்டிஷ் பொலிஸிக்கு உத்தரவிட வேண்டும் என நீதிமன்றத்திற்கு கோரிக்கை விடுத்தார்.
ஏப்ரல் 8ம் திகதி மனு தாக்கல் செய்த வழக்கறிஞர் Palwinder Kaur, அவர்களின் திருமணத்தில் மேலும் தாமதம் ஏற்படுத்தாமல், இளவரசர் ஹரியை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பிக்க வேண்டும் என கோரினார்.
சம்பவம் குறித்த விசாரணை நடத்தும் படி நீதிமன்றம் உத்தரவிட்டது. விசாரணையில் Kaur பிரித்தானியா இதுவரை பிரித்தானியாவுக்கு சென்றதே இல்லை என்பது தெரியவந்துள்ளது.
Kaur இளவரசர் ஹரியை திருமணம் செய்ய வேண்டும் என்பது பகல் கனவு என கூறி மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி அரவிந்த் சிங், சமூக வலைதளங்களில் பலர் பொய்யான கணக்குளை உருவாக்கி ஏமாற்றி வருவது அனைவரும் அறிந்ததே என குறிப்பிட்டார்.
அத்தகைய உரையாடலின் நம்பகத்தன்மையை இந்த நீதிமன்றத்தால் நம்ப முடியாது என கூறினார்.