இளவரசர் வில்லியம் கேட் தம்பதியருக்கு பதற்றத்தை உருவாக்கியுள்ள செய்தி
இளவரசர் ஹரி பிரித்தானியாவுக்கு வருவதாக கூறியுள்ள விடயம், இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேட்டுக்கு பதற்றத்தை உருவாக்கியுள்ளதாக ராஜ குடும்ப நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியா வரும் ஹரி
இளவரசர் ஹரி, தனது இன்விக்டஸ் விளையாட்டுப் போட்டிகளின் 10ஆவது ஆண்டு விழா நிகழ்ச்சிகளுக்காக மே மாதம் பிரித்தானியா வருகிறார்.
அப்போது, அவர், புற்றுநோய் பாதிப்புக்குள்ளாகியுள்ள தனது அண்ணி இளவரசி கேட்டை சந்திக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இளவரசர் வில்லியம் கேட் தம்பதியருக்கு பதற்றத்தை உருவாக்கியுள்ள செய்தி
ஹரி பிரித்தானியா வருவதாக வெளியாகியுள்ள தகவல், இளவரசர் வில்லியம் கேட் தம்பதியருக்கு பதற்றத்தை உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
தனது தந்தை சார்லஸ், அண்ணன் வில்லியம், அண்ணி கேட், தந்தையின் இரண்டாவது மனைவியான கமீலா, என ஒருவரையும் விடாமல் தொலைக்காட்சி பேட்டிகளிலும், தனது சுயசரிதைப் புத்தகத்திலும் கிழித்துத் தொங்கவிட்டு,
அவர்களுக்கு நீங்கா தலைக்குனிவை ஏற்படுத்திவிட்டு, இப்போது அண்ணியைப் பார்க்க ஹரி வருவதாக கூறியுள்ளதால், வில்லியமும் கேட்டும் பதற்றமடைந்துள்ளதாக ராஜ குடும்ப எழுத்தாளரான டாம் க்வின் (Tom Quinn) என்பவர் தெரிவித்துள்ளார்.
அதைவிட பெரிய பிரச்சினை, ஹரியுடன் அவரது மனைவி மேகனும் வருவாரா என்னும் கேள்வி மேலும் கூடுதல் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
Image: AP
எப்படியாவது இந்த அசௌகரியமான சூழலை தவிர்க்கவேண்டும் என வில்லியமும் கேட்டும் திட்டமிடக்கூடும் என்று கூறும் டாம், அண்ணனும் தம்பியும் ஒருவரோடு ஒருவர் சாதாரணமாக பழகுகிறார்கள் என்பதை மக்களுக்குக் காட்டுவதற்காக, குறைந்தபட்சம், ஹரியும் வில்லியமும் கொஞ்ச நேரம் பொது இடத்தில் இணைந்து தலைகாட்டக்கூடும் என்றும் கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |